கருட புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
பிரபஞ்ச உற்பத்தி
பரப்பிரம்மத்தின் இலக்கணம் சொல்லி, உலகம் நீருக்குள் மூழ்கி இருந்ததையும் சொல்லி, அதில் ஒரு பொன்முட்டை இருந்தது என்பதையும் சொல்கிற வரையில் கருட புராணம், ஏனைய புராணங்களைப் போல் உள்ளது. மற்ற புராணங்கள் எல்லாம் முட்டைக்குள் பிரம்மன் இருந்தார் என்று சொல்ல, கருட புராணம், முட்டைக்குள் விஷ்ணு இருந்தார் என்று சொல்கிறது. விஷ்ணு பிரம்மனையும், சிவனையும் தோற்றுவித்தார். முட்டைக்குள் இருந்த பொருட்களைக் கொண்டு பிரபஞ்சத்தை உற்பத்தி செய்தார். மூவர் என்று இங்கே சொல்வது அவர்கள் செய்யும் தொழில்கள் பற்றியே ஆகும். பிரம்மன் படைக்கிறார், விஷ்ணு காக்கிறார். சிவன் அழிக்கிறார் என்று சொன்னாலும் இம்மூவரும் வெவ்வேறானவர் அல்லர், ஒருவரே என்பதை உணர வேண்டும். பிரம்மன் முதலில் நான்கு கணங்களை(கூட்டங்களை)ப் படைத்தார். அவர்கள் முறையே தேவர்கள், அசுரர்கள், பிதுர்க்கள், மனிதர்கள். தேவர்கள் பகலிலும், அசுரர்கள் இரவிலும் மிகுதியான பலத்தைப் பெறுவர். இந்த நால்வகை தவிர ராட்சசர்கள், யக்கூடிர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், அனைத்து விலங்குகளையும் படைத்தார். பிரம்மனின் நான்கு வாய்களில் இருந்தும், நான்கு வேதங்கள் சொல்லப்பட்டன. மானசீக புத்திரர்கள், சுவயம்பு மனு ஆகியோரின் படைப்பு அடுத்து பேசப்படுகிறது. தட்சன் மகளாகிய வினதாவின் மகனாகத் தோன்றியவனே கருடன். இவனே கருடபுராணத்தை இயற்றியவன்.
கருட புராணம் விஷ்ணு, லட்சுமி, சூரியன் ஆகிய மூவரையும் வழிபடும் முறைகளையும், அவரவர்களை வழிபடும் போது சொல்லவேண்டிய மந்திரங்களையும் விரிவாகப் பேசுகிறது. விஷ்ணுவுக்கு வாசுதேவா, வாமன பாலபத்ராய, பார்ஜன்ய முதலிய ஆயிரம் நாமங்களைப் பேசுகிறது.
பாம்புக்கடியை நிவர்த்திக்க
பிரானேஷ்வரா என்ற மந்திரம் பாம்புக்கடியிலிருந்து ஒருவரை மீட்க உதவுகிறது. ஆனாலும் இதற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன. எந்த இடத்தில் இருந்து பாம்பு கடித்தது என்பதும், உடம்பில் எந்த உறுப்பில் கடித்தது என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். ஆறு, சுடுகாடு, கரையான் புற்று, மலை, மரப்பொந்து, கிணறு என்ற இடங்களில் இருக்கும் பாம்பு கடித்தால் இம்மந்திரம் பயன்படாது. மனித உறுப்புக்களில் கை கஷ்கம், இடுப்பு, தொண்டை, நெற்றி, காது, வயிறு, வாய், கைகள், முதுகு ஆகிய இடுப்புக்கு மேலே இருக்கும் பகுதிகளில் பாம்பு கடித்தால் இம்மந்திரம் பயன்படாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 2 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, நான்கு, பாம்பு, பிரம்மன், புராணம், அவதாரம், கருட, முட்டைக்குள்