முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » ஈசாப் நீதிக் கதைகள் » முயலும் முட்டாள் சிங்கமும்
ஈசாப் நீதிக் கதைகள் - முயலும் முட்டாள் சிங்கமும்
ஒரு காட்டில் கொடிய சிங்கம் ஒன்று இருந்தது. பசி இல்லாவிட்டாலும் விலங்குகளை வேட்டையாடும் இரக்கமற்ற சிங்கம் அது. அந்தச் சிங்கத்தை கண்டாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடிவிடும்.
இதற்கு ஒரு தீர்வு காண அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் குகைக்குச் சென்றன. "சிங்க ராஜா, நீங்கள் வேட்டையாடுவதில் வல்லவர். ஆனால் உங்களால், இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் அழிகின்றன. நீங்கள் வேட்டையாடாமல் உங்கள் கூகையிலே இருந்தால், தினம் ஒரு விலங்கை நாங்கள் உங்கள் குகைக்கே அனுப்புகிறோம். அதைத் தின்று நீங்கள் பசி ஆரலாம். இப்படிச் செய்தால் மற்ற விலங்குகள் உயிர் பிழைக்கும்." என்று சிங்கத்திடம் முறையிட்டன.
சிங்கமும் தினமும் இரை தன் குகைக்கே வந்தால் வேலை மிச்சம் என்று மகிழ்ந்தது. "இந்த உடன்பாட்டிற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும். ஒரு நாள் தவறினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்." என்றது.
அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கு சிங்கத்தின் குகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கம் குகைக்கு வரும் விலங்கை மட்டும் தின்று விடும். மற்ற விலங்குகள் எல்லாம் நிம்மதியாகக் காட்டை சுற்றி வந்தன. இப்படிப் பல நாட்கள் செல்ல, ஒரு நாள் ஒரு சிறு முயல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
முயலுக்கு இறக்க விருப்பம் இல்லை. சிங்கத்தை எதிர்த்துப் போர் இட தன்னால் முடியாது என்பதை உணர்ந்த புத்திசாலி முயல் யோசித்தது. முன்பு ஒருநாள் தான் பார்த்த கிணற்றின் ஞாபக வர ஒரு திட்டம் தீட்டியது. சிங்கத்தின் குகைக்கு வேண்டும் என்றே தாமதமாக சென்றது. சிங்கம் கடும் பசியில் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முயல் வரவில்லை என்றால் எல்லா விலங்குகளையும் கொன்று விட எண்ணியது. இறுதியில் குகைக்கு ஓடிவந்த முயலைப் பார்த்த சிங்கம் கோபமடைந்து. தன் பெரும் பசிக்கு ஒரு சின்ன முயல் எப்படி ஈடாகும்?
சினம் கொண்ட சிங்கம் "ஏ முயலே.. உனக்கு என்ன தயிரியம். ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய். நீ மிகவும் சிறியதாகவும் இருக்கிறாய். உன்னைத் தின்றால் எனக்கு எப்படிப் பசி தீரும்? நான் உனக்காகக் காலையில் இருந்து காத்துக் கிடக்கிறேன். முதலில் உன்னைக் கொன்று, பிறகு உன் முயல் கூட்டத்தை கொன்று தின்கிறேன். என்னை ஏமாற்ற நினைத்தால் இது தான் தண்டனை." என்றது.
அதற்கு முயல் பணிவுடன் "சிங்க ராஜா, நான் தாமதமாக வந்ததற்கு நான் காரணம் இல்லை. தங்களை ஏமாற்ற யாரும் நினைக்க வில்லை. உங்கள் குகைக்கு வர நான் காலையிலே புறப்பட்டு விட்டேன். ஆனால்..." என்று இழுத்தது. சிங்கம், "ஆனால் என்ன.. ? " என்று கர்ச்சித்தது.அதற்கு முயல், "என்னால் உங்கள் பசியை தீர்க்க முடியாது என்று எனக்கும் முயல் கூட்டத்திற்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் என்னோடு வேறு நான்கு முயல்களும் வந்தன. ஆனால் வரும் வழியில் வேறொரு சிங்கம் இருந்தது. நாங்கள் எவ்ளவு சொல்லியும் மற்ற நான்கு முயல்களையும் பிடித்து வைத்துக் கொண்டது. மேலும் அந்தச்சிங்கம் தான் இந்தக் காட்டின் உண்மையான ராஜா என்றும் நீங்கள் போலி என்றும் சொன்னது. உங்களுக்கு உண்மையில் வீரம் இருந்தால் தன்னை வீழ்த்த வரும்படி அழைத்தது. இந்தச் செய்தியை உங்களுக்குத் தர தான் என்னை உயிருடன் விட்டது. இது தான் நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்." என்றது.
தன் காட்டில் இன்னொரு சிங்கம் இருப்பதைக் கேட்ட சிங்க ராஜாவிற்கு கடும் கோவம் ஏற்பட்டது. "உடனே என்னை அந்தச் சிங்கத்திடம் அழைத்துச் செல். அந்தச் சிங்கத்தை ஒரே அறையில் கொன்று விடுகிறேன். என் காட்டில் வந்து என்னையே அவமானப் படுத்துகிறான்." என்று முயலிடம் கேட்டது.
அதற்கு முயல், "சிங்க ராஜா, அந்தத் திமிர் பிடித்த சிங்கம் மிகவும் பெரிதாகவும் வலிமையாகவும் இருக்கிறது. அது ஒரு விசித்திர குகையில் இருக்கிறது. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். " என்று கூறி சிங்கத்தை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்றது.
கிணற்றுக்கு அருகில் வந்தவுடன் முயல், "சிங்க ராஜா!.. இது தான் அந்த பொல்லாத சிங்கத்தின் குகை. நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் சென்று அந்தச் சிங்கத்தைக் கொன்று விடுங்கள்." என்றது.
சிங்ககும் கிணற்றை எட்டிப் பார்த்தது. கிணற்று நீரில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து, உள்ளே ஒரு சிங்கம் இருப்பதாக நினைத்தது. முயல் சொன்னது உண்மை என்றும் தன் காட்டுக்குள் வேறொரு சிங்கம் நுழைந்து விட்டதென்றும் நம்பியது முட்டாள் சிங்கம்.
பிறகு சிங்கம் கிணற்றில் எட்டிப்பார்த்து தன் முழு பலத்துடன் கர்ச்சித்தது. உடனே அந்தச் சத்தம் மிக அதிகமாகக் கீழ் இருந்து மேலே எதிரொலித்தது. மீண்டும் கிணற்றில் உள்ள சிங்கம் தான் இப்படிக் கர்ச்சித்ததென்று ஏமார்ந்து சிங்கம். சினம் கொண்ட சிங்கம் கிணற்றுக்குள் குதித்தது. உள்ளே வெறும் தண்ணீர் இருப்பதைக் கண்ட சிங்கம், முயல் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தது. பலத்த காயம் அடைத்த சிங்கம் மேலே வர முடியாமல் கிணற்றுக்குள் இறந்தது. முயலும் மற்ற விலங்குகளும் நிம்மதியாக இருந்தனர். முயல் அந்தக் காட்டிற்கே செல்ல விலங்கானது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முயலும் முட்டாள் சிங்கமும் - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - தினமும், இரண்டு, தண்ணீர், இருக்கும், வரும்