6. திருவாதிரை - நட்சத்திர ஆருடம்
6. திருவாதிரை வந்ததால்..
நம்பின பேர்களை நாசஞ்செய்வார் நஷ்டம் திருவாதிரைதா னுதயமானால் வம்புகளும் வழக்குகளும் வந்தே தீரும் வாதுசெய்வார் கொடுத்தபொருள் கேட்பாயானால் பம்பரம்போல் பார்முழுவதும் அலைந்திட்டாலும் பலியாது உனதுயெண்ணம் பகையேயாகும் சம்பவிக்கும் பலவிதநோய் சஞ்சலங்கள் சாற்றினேன் வாரமைந்தில் தணியுமப்பா. |
பொருள்: கிரகங்கள் கொடியதாக இருப்பதால், நம்பின பேர்கள் நயவஞ்சகம் செய்வார்கள். குடும்பத்தில் பலவிதத்தில் வம்புவழக்குகளும், தொழிலில் நஷ்டநிஷ்டூரமும், கொடுக்கல் வாங்கலில் வாதும் சூதும் ஏற்படும். மேலும், பாத சனியின் கொடுமையினால் அலைச்சலும், கஷ்டமும், அகால போஜனமும், எண்ணம் தவறான பலன்கூட்டும் நிலையும், நிந்தனையும், பகையும் அதிகரிக்கும். நோயும் சஞ்சலமும் தரும். ஐந்து வாரம் கழித்து நன்மை உண்டாகும். மத்திமமான பலன் தரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
6. திருவாதிரை - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்