கைந்நிலை - ஆறாம் நூற்றாண்டு
‘கை’ என்பது ஒழுக்கம். இங்கு அகவொழுக்கத்தை இது குறிக்கும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிய நூல் என்பது ‘கைந்நிலை’ என்பதன் பொருள். திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்கள் கொண்டது. எனவே இது ஐந்திணை அறுபது என்ற பெயர்க்குத் தகுதியானது. இதில் பாடல்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் 18 பாடல்கள் சிதைவுகளுடன் காணப்படுகின்றன.
ஆசிரியர்
இதன் ஆசிரியர் மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். புல்லங்காடனார் இவரது இயற்பெயர். இவர் தந்தையார் காவிதிப்பட்டம் பெற்றவர் எனத் தெரிகிறது. மாறோகம் என்பது கொற்கையைச் சூழ்ந்த பகுதி. தென்னவன் கொற்கைக் குருகு இரிய என்ற தொடர் இந்நூலின் 60 ஆம் பாடலில் இடம் பெறுவதால் இவர் பாண்டியனால் ஆதரிக்கப்பட்டவர் என்று கருதலாம்.
சிறப்புச் செய்தி
அகப்பொருளைப்பாடுவதில் இந்நூலும் ஏனைய நூல்களையொத்தே காணப்படுகிறது. தாரா (40) பாசம் (3) ஆசை (3) இரசம் (5) கேசம் (12) இடபம் (36) உத்தரம் (48) முதலிய வடசொற்களை இதில் காணலாம்.
இதன் சில பகுதிகட்கு மட்டுமே உரை கிடைக்கிறது. இதன் செய்யுட்களை இளம்பூரணர் முதலான பழைய உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளனர். இதிலுள்ள அழகிய பாடல்களுள் ஒன்று வருமாறு:
காந்தள் அரும்பகை என்று கதவேழம் ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனன் நோக்கிப் பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நாடன் காய்ந்தான் கொல் நம் கண் கலப்பு ! (9) |
(சுதவேழம் = யானை; மருப்பு = தந்தங்கள்; இனன் = இனம்; பயமலை = பயன் மிகுந்த மலை; காயந்தான் கொல் = வெறுத்தானோ?; கலப்பு = கூட்டுறவு)
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைந்நிலை - Kainnilai - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கைந்நிலை, ஆறாம், நூற்றாண்டு, இதன், என்பது, தமிழ்நாட்டுத், நூல்கள், தமிழ், தகவல்கள், இலக்கிய, ஆசிரியர், புல்லங்காடனார், கொல், | , கலப்பு, பாடல்கள், இனன், இவர், tamilnadu, tamil, century, kainnilai, literatures, list, ஐந்திணை, ஒழுக்கம், information, இதில்