விருதுநகர் - தமிழக மாவட்டங்கள்
குகன் பாறை :
ராமன் வருகைக்காக குகன் காத்திருந்த குன்று எனக் கூறுவர். இது 50மீ உயரமுடையது. இது ஏழாயிரம் பண்ணைக்குத் தென் மேற்கே அமைந்துள்ளது. கருங்கல் தூண் வேலைக்கு இங்கு கல் உடைக்கின்றனர்.
சிப்பிப்பாறை :
ஏழாயிரம் பண்ணையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் சிறு குன்றுகள் நிறைந்தது. இவ்வூர் வேட்டை நாய்களுக்குப் புகழ் பெற்றது. பாறை மீது பெருமாள் கோவில் இருக்கிறது. நாயக்கர்களின் செல்வாக்கு மிகுந்த ஊர். பருத்தி அரைக்கும் ஆலை ஒன்றும் இயங்குகிறது.
பனையடிப்பட்டி :
இவ்வூரில் கொய்யாத் தோட்டங்களும், எலுமிச்சைத் தோட்டங்களும் ஏராளமாக உள்ளன.
ஏழாயிரம் பண்ணை :
தளவால் அரியநாதர் ஏற்படுத்திய பாளைப்பட்டுகளுள் ஏழாயிரம் பண்ணையும் ஒன்று. இதற்கு இளஞ்சிராப் பண்ணை என்ற பெயரும் உண்டு. வெம்பக்கோட்டை ஒன்றியத்தின் பெரிய ஊர்; மக்கள் தொகை மிகுந்தது. நெல், மிளகாய், வெங்காயம், கரும்பு, புகையிலை முதலியன பயிரிடப்படுகின்றன. தோல் பதனிடும் தொழிற்சாலை, தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மத்தாப்பு வெடி தொழிற்சாலைகள், உயர்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன. சித்திரை மாதத்தில் 12 நாட்கள் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம், தென்னிந்தியத் திருச்சபையின் தேவாலயம், பிள்ளையார் கோவில் முதலியனவும் உள்ளன.
ஆலம்பட்டி :
சாத்தூரிலிருந்து 5கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. கூட்டுறவு முறையில் செங்கல் சூளைகள் பல நடைபெறுகின்றன.
இருக்கங்குடி :
இவ்வூர் சாத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. அர்ச்சுனா ஆறு, வைப்பாறு இவற்றால் வளமுறுகிறது. இவ்வூர் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் விழாவிற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். உப்பத்தூர் பகுதி வேளாண்மை வளத்தாலும், கொல்லம்பட்டி பகுதி கத்தரிக்காய் விளைச்சலாலும், மசூதியாலும், வைப்பற்றில் அழகர் இறங்கும் திருவிழாவாலும் சிறப்புற்று விளங்குகின்றன.
நென்மேனி :
இவ்வூரில் கைலாசநாதர் கோவிலும், கத்தோலிக்கத் தேவாலயமும் உள்ளன. இவ்வட்டத்திலேயே பெரிய கண்மாய் இங்குதான் உள்ளது. நத்தத்துப்பட்டி, கட்ட மொம்மன் வரலாற்றில் வரும் வெள்ளையத் தேவர் பிறந்த ஊராகும்.
திருத்தங்கல் :
இவ்வூர் சிவகாசிக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், வார்ப்படத் தொழிற்சாலையும், உரத்தயாரிப்புத் தொழிற்சாலையும், கூட்டுறவு எண்ணெய் உற்பத்தியாளர் சங்கமும் சிறப்பாக இங்குச் செயல்படுகின்றன.
ஆனைக்கூடம் :
சிவகாசி-திருத்தங்கல் ஊர்களுக்கு இடையில் அர்ச்சுனை ஆற்றின் வடகரையில் இச்சிற்றுர் அமைந்துள்ளது. முதலாம் பராந்தகனை விரட்ட, இராசசிம்ம பாண்டியன் ஈழநாட்டு மன்னனின் உதவியை வேண்டினான். ஈழநாட்டிலிருந்து வந்த யானைப்படை வீடு கொண்ட இடம் யானைக் கொட்டம் எனப்பட்டது. அதுவே ஆனைக்கூடம் என பெயர் பெற்றது.
காளையார் குறிச்சி :
சிவகாசியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் கடைமுடை அய்யானார் கோவிலில் காணப்படும் பெரிய ஆலமரங்கள் காண்பதற்குரியன. 1942-இல் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தலைவர் காமராஜ் இக்கோவிலில் மறைந்திருந்தார் என்பர். இங்கு மறவர்கள் மிகுதியாக உள்ளனர். கரிசல் காடுகள் மிகுதி. நெல், கம்பு, கேழ்வரகு முதலியன முக்கிய விளைபொருட்கள். சாட்சியாபுரம் மா, கொய்யா, எலும்மிச்சைத் தோட்டங்களால் சிறப்புப் பெற்றுள்ளது. வாடியில் வெற்றிலை வாணிகம் மிகுதி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விருதுநகர் - Virudhunagar - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், தொலைவில், ஏழாயிரம், விருதுநகர், tamilnadu, உள்ளது, தமிழக, மாவட்டங்கள், பெரிய, தமிழ்நாட்டுத், கோவில், தகவல்கள், சாத்தூரிலிருந்து, கத்தோலிக்கத், மாரியம்மன், நடைபெறும், தேவாலயம், பகுதி, ஆனைக்கூடம், மிகுதி, | , தொழிற்சாலையும், திருத்தங்கல், கோவிலில், தொழிற்சாலைகள், கூட்டுறவு, பண்ணை, பாறை, அமைந்துள்ளது, குகன், information, virudhunagar, districts, இங்கு, பெற்றது, நெல், முதலியன, மக்கள், தோட்டங்களும், இவ்வூரில், தீப்பெட்டித்