தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
கல்வி
பள்ளிகள் :
தொடக்கநிலை 1,067
நடுநிலை 284
உயர்நிலை 64
மேல்நிலை79
கல்லூரிகள் 10
பொறியில் 1
கல்லூரிகள் :
தொ.நு.கல்லூரி 4
விவசாயக்கல்லூரி 1
தொழில்பயிற்சிக் கல்லூரி 3
ஆசிரியர் பயிற்சி கல்லூரி 2
ஆற்றுவளம் :
தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் நதிகள் எதுவுமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் தூத்துக்குடி மாவட்டம் வழியாக பாய்ந்து கிழக்கிலுள்ள கடலில் போய்ச் சேருகின்றன.
ஸ்ரீவைகுண்டம் வட்டம் :
பொருநைப் பாசனத்தால் சிறப்பு பெறுகிறது. மருதூர் அணைக்கட்டிலிருந்து மேலக்கால், கீழக்கால் ஆகிய இரு கால்வாய்களும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தெற்கு வடக்குப் பிரதான வாய்க்கால்களும் பாசனத்துக்கு நீர் வழங்குகின்றன.
கோவில்பட்டி வட்டம் :
மலட்டாறு, உப்போடை போன்றவை மேட்டு நிலங்களில் பெய்யும் மழைநீரை பெற்று, தூத்துக்குடிக்குத் தெற்கு 1 கி.மீ. தொலைவிலுள்ள கோரப்பள்ளம் குளத்தின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.
விளாத்திக்குளம் வட்டம் :
வைப்பாற்றில் திடீர் வெள்ளம் ஏற்படும். விளாத்திக் குளம்-கோவில்பட்டி சாலைக் கடக்குமிடத்தில் வெள்ள காலங்களில் போக்குவரத்து இருக்காது. அனுமன்நதி- திருவாங்கூரில் உற்பத்தியாகி இங்கு கடலில் கலக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு :
இது 1889-இல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 17.75 இலட்ச ரூபாயில் கட்டப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 12,000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் பாசன வாய்ப்பு பெற்றுள்ளன.
மணிமுத்தாறு அணைக்கட்டு :
இந்த அணைக்கட்டு மூலம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்கள் பெருமளவு பாசன நீர் பெறுகின்றன.
காட்டுவளம் :
தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுவளம் குறைவே. விடத்தேரை என்னும் கனமான, கரையான் அரிக்க முடியாத ஒருவகை மரம் திருச்செந்தூர் வட்டத்தில் காணப்படுகிறது. சிங்கம்பட்டி மலைப்பகுதியிலும், மணி முத்தாற்றின் இரு கரைகளிலும், நெல்லிமரங்கள் அதிகம் உள்ளன. குறுமலையிலும், கொழந்து மலையிலும் மருத்துவ மூலிகைகள் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
தேரிகள் :
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் தேரி என்னும் மணற்குன்றுகள் காணப்படு கின்றன. தேரி என்பது செக்கத் சிவந்த மணற்பாங்கான இடம். கோடைக் காற்றினால், தேரிகள் தோற்றம் மாறி, மாறி காணப்படும். இடையன் குடி, குதிரைமொழி, சாத்தான் குளம் பகுதிகளிலுள்ள தேரிகள் உயரமான அகன்ற மேடாகும். இது போன்ற தேரிகளை பிற மாவட்டங்களில் காணமுடியாது.
வேளாண்மை :
இம்மாவட்டத்தின் வடகோடியிலும், தென் கோடியிலும் பாசன வசதி போதியளவு இல்லை. இடைப்பட்ட வட்டங்களில் புஞ்சைபயிர்கள் பயிரிடப்படுகின்றன.
பருத்தி :
தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் பருத்தியும், மிளகாயும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவில்பட்டி வட்டம், இந்தியாவிலேயே மிகுந்த அளவில் பருத்தி விளையும் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி காலந்தாழ்ந்து மழை பெறுகின்ற காரணத்தால், பிற மாவட்டங்களுக்குப் பின்னரே, இங்குப் பருத்தி விளைவது வழக்கம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், மாவட்டத்தில், வட்டம், tamilnadu, கோவில்பட்டி, தமிழக, மாவட்டங்கள், கடலில், தேரிகள், வட்டங்களில், அணைக்கட்டு, தமிழ்நாட்டுத், பாசன, திருச்செந்தூர், தகவல்கள், பருத்தி, கல்லூரி, இம்மாவட்டத்தின், என்னும், தேரி, | , அளவில், மாறி, காட்டுவளம், தெற்கு, information, districts, thoothukudi, கல்லூரிகள், உற்பத்தியாகும், கலக்கிறது, நீர், அணைக்கட்டிலிருந்து, குளம்