நாகப்பட்டினம் - தமிழக மாவட்டங்கள்
திருவெண்காடு:
சீர்காழியிலிருந்து 11 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. தேவாரத்தால் பாடல்பெற்ற தலம். மணிவாசகரும் இத்தலத்து பெருமானை பாடிப்பரவியுள்ளார். தில்லையிற் போலவே இங்கும் நடராசசபை அமைந்திருக்கிறது. புதனுக்குத் தனிகோயிலும், சிலப்பதிகாரம் கூறும் சூரியகுண்டம்-சோமகுண்டம் என்னும் குளங்கள் இங்குண்டு.
திருவெண்காடு |
செம்பொன்னார் கோயில்:
இவ்வூர் மயிலாடுதுறையிலிருந்து தரங்கை போகும் வழியில் 8.கி.மீ தொலையில் இருக்கிறது. தேவார மூவராலும் பாட தலம். சோழ மன்னர்களின் வெற்றி நினைவாக அமைந்த இக்கோயில், நாயக்க மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலில் அழகிய செப்பு விக்ரகங்களும், கொடிவட்டமும், கல்வெட்டும் குறிப்பிடத்தக்கவை.
குத்தாலம்:
மயிலாடுதுறைக்கு தென்மேற்கே 10.கி.மீ தொலைவிலிருக்கிறது. நெல்வாணிகம் இங்கு முக்கியத் தொழில். தேவார மூவராலும் பாடப்பட்டத்தலம். சோழர்கள் கட்டிய மூன்று கோவில்கள் இங்கு உள்ளன. அதில் ஒரு கோயிலின் பெயர்: 'சொன்னவாறு அறிவார் கோயில்'. இக்கோயிலில் உள்ள மணக்கோல நாதர் திருமேனியும்; சண்டிசுவரும் செம்பியன் மாதேவி திருப்பணி காண வேண்டியவை.
திருக்கடவூர்:
மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையிலுள்ள இந்த இரயில் நிலையத்திற்கு திருக்கடையூர் என்றும் தலத்துக்கு திருக்கடவூர் என்றும் பெயர். இவ்வூர் கோயில் தேவார மூவரால் பாடப்பெற்றது. சிவபெருமானின் அஷ்டவீரட்ட தலங்களுள் ஒன்று. காலசம்கார மூர்த்தியும் எருமையுடன் கூப்பிய கையொடு நிற்கும் யமனும், அபிராம அம்மன் கோயிலும் இங்கு காணத்தக்கவை. இத்தலத்தில் எழுந்த சமய இலக்கியம்: அபிராமி அந்தாதி.
தில்லையாடி: இவ்வூர் தரங்கம்பாடி அருகில் இருக்கிறது. தமிழிசைக்குத் தரமான பாடல்களைத் தந்த அருணாசலக் கவிராயர் பிறந்தது இவ்வூரே. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுடன் போராடிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்ததும் இந்தவூர்தான். வள்ளியம்மையை நினைவு கூரும் முகமாக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
வழுவூர்:
மயிலாடுதுறையிலிருந்து எட்டு கி.பி. தொலைவில் உள்ளது. நாட்டிய மேதை வழுவூர் ராமைய்யாபிள்ளை பிறந்ததும் இவ்வூரே. தேவாரத்தில் குறிப்பிடப்பட்ட வைப்புத்தலம். இங்கள்ள கோவிலில் பிட்சாடணர் திருவுருவமும், முருகன் திருவுருவமும், ஐந்து தீர்த்தங்களும், மாசிமகத்தன்று நிகழும் கஜசம்கார திருவிழாவும் காணத்தக்கவை.
மயிலாடுதுறை:
தஞ்சை-சென்னை வழியில் உள்ள முக்கியமான இரயில் தடத்தில் உள்ளது இவ்வூர். இறைவி மயிலாக ஆடிய காவிரித் துறையில் இவ்வூர் அமைந்ததால் மயிலாடுதுறை என அழைக்கப்பட்டது. சோழர் காலத்திற்கு பின்னர் இவ்வூர் வடமொழி பெயர்பெற்று 'மாயூரம்' என்றானது. பின்னர் தமிழறிஞர்கள் போராடி பழைய பெயரை நிலைநாட்டினர். தமிழில் முதல் நாவல் படைத்த வேதநாயகம் பிள்ளை இவ்வூரினரே ஆவார்.
காவிரியின் வடகரையில் வள்ளலார் கோயில், துலாகட்ட மண்டபத்தருகே விசுவநாதர் கோயில், சம்பந்தர் பாடிய மயூரநாதர் கோயில், அதன் உட்கோயிலும் அருணகிரிநாதர் பாடல் பெற்றதுமாகிய குமரக்கட்டளை என்ற கோயில்களும் இங்குண்டு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாகப்பட்டினம் - Nagapattinam - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், கோயில், நாகப்பட்டினம், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், இங்கு, தேவார, மயிலாடுதுறை, உள்ளது, தமிழ்நாட்டுத், தகவல்கள், இரயில், தரங்கம்பாடி, பின்னர், திருக்கடவூர், | , என்றும், திருவுருவமும், உள்ள, வழுவூர், பிறந்ததும், இவ்வூரே, காணத்தக்கவை, தில்லையாடி, நினைவு, இருக்கிறது, தொலைவில், தலம், திருவெண்காடு, information, nagapattinam, districts, இங்குண்டு, இக்கோயில், மூவராலும், இக்கோயிலில், வழியில், மயிலாடுதுறையிலிருந்து, தஞ்சை, பெயர்