மதுரை - தமிழக மாவட்டங்கள்
இம்மாகாலை கட்டி முடித்து 300 ஆண்டுகள் ஆகின்றன. கட்டிடத்தைக்
கட்டி முடிக்க முப்பத்தாறு வருடங்கள்
ஆயின. கடம்பவனமாயிருந்த இந்த இடத்தை அழித்து, வண்டியூர்
தெப்பக்குளத்திலிருந்து மண் எடுத்து வந்து கட்டிடத்தைக்
கட்டினார்கள். மண்வெட்டின இடம் பள்ளமாகிப் போனதும், அதைத்
தெப்பக்குளமாகத் திருமலை நாயக்கர் மாற்றி விட்டார். தூண் ஒன்றின்
உயரம் 20 மீட்டர். சுற்றளவு 4 மீட்டர். துணை வளைத்துப் பிடிக்க
மூன்று பேர் கைகோத்து நிற்க வேண்டும். கடுக்காச்சாறு,
கரும்புச்சாறு, அரபு நாட்டுச் சுண்ணாம்பு, பதனீர் இவ்வளவும்
சேர்த்து சாந்து கூட்டிக் கட்டப்பட்டதென்பர். பத்துத் தூண்
சந்து, மகாலுக்கு வடக்கே உள்ளது. இங்குள்ள 20மீ உயரமுள்ள
கருங்கல் தூண்களில் யானைகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறுவர்.
மகாலில் அந்தபுரமும் நாளோலக்க இருக்கையும் காணத் தக்கவையாகும்.
தினமும் காலை 9 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும், மதியம் 2
மணியிலிருந்து 5 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.
காந்தி அருங்காட்சியகம் :
காந்தி அருங்காட்சியகம் |
முக்கிய ஊர்கள் :
மதுரை :
வரலாற்றுச் சிறப்பு பெற்றிருப்பதுடன், மக்கள்தொகை செறிந்த நகரமாயும் மதுரை மூதுர் திகழ்கிறது. இதன் வேறு பெயர்களாவன : நான்மாடக் கூடல், தென்மதுரை, ஆலவாய், சிவராசதானி, கடம்பவனம். மதுரை, நாகமலைக்கும் யானைமலைக்கும் இடையே வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அமைப்பு தாமரை மலர் போன்று அமைந்துள்ளது. கோயிலை மையமாக வைத்து அதன் கிழக்கேயும் தெற்கேயும் மேற்கேயும் வடக்கேயும் திக்கின் பெயரால் நான்கு வீதிகள் உள்ளன. நான்கு திக்குகளில் பரவிய வீதிகள் ஒவ்வொன்றும் ஒரு சின்னச் சதுரமாகும்.
ஆடிவீதி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி எனத் தமிழ்த் திங்கள்களின் பெயர்களை நகரின் வீதிகள் சூடியுள்ளன. ஆடி வீதி கோயிலுக்குள் உள்ளது. மதுரை ஒரு மாநகராட்சி ஆகும். பாடு தமிழ் வளர்த்த கூடல், தமிழ் கெழு கடல், மதுரை மூதுர், மாண்புடை மரபின் மதுரை, மதுரைப் பெரு நன்மாநகர், மணிமதுரை, மாடமதுரை மாநகர் என இலக்கியங் களில் மதுரை சிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரும் இந்நகரத்தை கோவில் மாநகர் என்றும், விழா மிகுந்த நகர் என்றும், தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றும் புகழ்ந்திருக் கின்றனர்.
புராண வரலாறு : திருவிளையாடல் புராணம் மதுரை மாநகரின் வரலாறைக் கூறுவ தாகும். அதில் காணும் கதைகளுக்கேற்ற அடையாளச் சின்னங்களை மதுரையில் இன்றும் காணலாம். ஏழுகடல் தெருவிலுள்ள குளம் மதுரை அரசி காஞ்சனமாலைக்காக ஏழு கடல்களையும் மதுரைக்கு அழைத்த கதையின் சின்னமாக விளங்குகிறது. வைகை ஆறு குண்டோதரனின் தாகத்தைத் தணிக்க ஏற்பட்டது. சமணர் மதுரையை அழிக்க அனுப்பிய பசு, நாகம், யானை இம்மூன்றின் பெயர்களில் மூன்று மலைகள் திகழ் கின்றன. பசுவை வெல்வதற்கு அனுப்பப்பட்ட இடபமும் ஒரு மலையாகி அழகர் மலை என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.
மாணிக்கவாசருக்காக சொக்கநாதர் நரிகளைக் குதிரைகளாக்கிய இடம் நரிக்குடி. பின்னர் குதிரைகள் நரிகளாகச் சென்ற இடமே செல்லூர். அந்நரிகள் கத்திச் சென்ற இடம் கத்துநரி என்பது. இப்பொழுது தத்தனேரி என வழங்குகிறது. அந்நரிகள் ஒன்றை யொன்று தொடர்ந்து சென்ற இடம் தோடனேரி எனப்படும். மண்டியூர் என்பது வண்டியூர் என்றாகியுள்ளது. குதிரைகள் வந்தபொழுது இங்கு புழுதி மண்டியதால் இப் பெயர் பெற்றது. பாண்டியன் குதிரைகளை விலை மதிப்பிட்ட இடம் மதிச்சயம். பாண்டியர்களின் அரண்மனை இருந்த இடம் மாநகர். வெள்ளியம்பலத் தெரு, சிவ பெருமான் கால் மாற்றி ஆடியதைக் குறிப்பது. வலைவீச்சுத் தெப்பக்குளம், அவர் மீன் பிடித்த திருவிளையாடல் நிகழ்ச்சியைச் சார்ந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, இடம், மணியிலிருந்து, வீதி, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், வரையிலும், அமைந்துள்ளது, மாநகர், சென்ற, என்றும், வீதிகள், அவர், காந்தி, கட்டி, தகவல்கள், தமிழ்நாட்டுத், தமிழ், நான்கு, பெயரால், information, districts, என்பது, | , அந்நரிகள், madurai, திருவிளையாடல், குதிரைகள், கூடல், இங்கு, தூண், மாற்றி, காலை, இங்குள்ள, மூன்று, உள்ளது, வண்டியூர், அருங்காட்சியகம், காந்தியடிகள், மீட்டர், கட்டிடத்தைக், என்னும், வாழ்ந்த, மூதுர்