மதுரை - தமிழக மாவட்டங்கள்
விளாச்சேரி :
இது பரிதிமாற் கலைஞர் பிறந்த ஊர். திருப்பரங்குன்றத்திலிருந்து 3.கி.மீ. தொலைவில் உள்ளது.
நாகமலை புதுக்கோட்டை :
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியாலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாலும் இவ்வூர் வளர்ச்சி பெற்று விளங்குகிறது.
ஹார்வி பட்டி :
1963 முதல் ஹார்விபட்டியை தமிழக அரசு நகரியமாக அறிவித்துள்ளது. மதுரை கோட்ஸ் மில் ஊழியர்களுக்காக இது ஏற்படுத்தப்பட்டது. ஆலைக்கும் இவ்வூருக்கும் இடையே இரயில் வசதி செய்யப்ட்டுள்ளது.
உறங்காம்பட்டி :
மேலூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. வளமான ஊர். மாசி மாதத்தில் நடை பெறும் மஞ்சு விரட்டு விழா பெரும்புகழ் வாய்ந்தது. உறங்காதவன்பட்டி என்பது உறங்காம்பட்டி என அழைக்கப்படுகிறது.
மேலூர் நகரம் :
மேலூர் 1978 முதல் நகராட்சியாக விளங்கி வருகிறது. மதுரைக்கு வடகிழக்கே சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இது வட்டத் தலைநகராகவும் ஒன்றியத் தலைநகராகவும் சிறப்புறுகிறது. பெரியாற்று வாய்க்கால் பாசனத்தால் வளம் பெற்றுத் திகழ்கிறது. பல அரசு அலுவலகங்கள் இருப்பதாலும், வணிகச் சந்தை நடைபெறுவதாலும் மக்கள் போக்குவரத்து மிகுதி. இங்கு கல்யாண சுந்தரர்-கமாட்சியம்மன் கோவில் உள்ளது. பல தொழிலகங்கள், கூட்டுறவு நூலாலை, கோழிப்பண்ணை, கலைக் கல்லூரி ஆகியன உள்ளன. திங்கள் கிழமை தோறும் சந்தை கூடுகிறது. வியாழன்தோறும் கடைகளுக்கு
விடுமுறை.
சூரக்குண்டு :
நீலநிற கத்தரிக்காய்க்குப் பெயர் பெற்ற இவ்வூர் சின்ன சூரக்குண்டு, பெரிய சூரக்குண்டு என இரு பகுதிகளாக அழைக்கப்படுகிறது.
சுக்காம்பட்டி :
புதுச் சுக்காம்பட்டி மேலூர் நகராட்சியில் உள்ளது. பழைய சுக்காம்பட்டி தனி ஊராட்சி மன்றம். கோடையில் கத்திரி பயிராகிறது. தென்னை வளம் மிகுதி. சுக்கான் மிகுதியாகக் கிடைக்கிறது.
அரிட்டாப்பட்டி :
மேலூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ளது. மேலூருக்கும் அழகர் கோயிலுக்கும் இடையே உள்ள சிற்றுர். இங்குள்ள கல்வெட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைக் குறிப்பிடுகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் தமிழ் வரிவடிவம் எவ்வாறிருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. பெருமலை எனப்படும் தனியிடத்தில் குடவரைக் கோயில், நடுவயலில் ஒரே கல்லாலான தேர், இளமை நாயகி அம்மன் கோயில், இடைச்சி மண்டபம் என்னும் குடவரைக் கோயில் முதலியன உள்ளன.
அம்பலக்காரன்பட்டி :
வெள்ளையனை எதிர்த்த வீரவரலாறு இவ்வூருக்கு உண்டு. இங்குள்ள வல்லடியான் கோவில் புகழ்பெற்றது. இத்தெய்வத்தைப் பற்றி நாட்டுப் பாடல்கள் பல வழங்குகின்றன.
திருக்கானை :
இது பூலாம் பட்டிக்கு அருகேயுள்ள சிற்றுர். இங்குள்ள காராளன் கோவில் மிகப் பழமையானது. இக்கோவிலில் கல்யானை உருவம் ஒன்றுள்ளது. அதைத் திசை திருப்பி விட்டால், சற்றுநேரத்தில் மீண்டும் இருந்த நிலைக்கே திரும்பிவிடும் என்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, தமிழக, உள்ளது, tamilnadu, மாவட்டங்கள், இங்குள்ள, சுக்காம்பட்டி, சூரக்குண்டு, கோவில், மேலூர், தொலைவில், கோயில், தமிழ்நாட்டுத், தகவல்கள், மிகுதி, | , சிற்றுர், குடவரைக், சந்தை, உறங்காம்பட்டி, இவ்வூர், information, districts, madurai, அரசு, இடையே, தலைநகராகவும், அழைக்கப்படுகிறது, மேலூரிலிருந்து, வளம்