சோழர் வரலாறு - கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்
காவிரி வரலாறு
காவிரியாறு அகத்தியர் கமண்டலத்திலிருந்து வந்தது என்னும் கதை மணிமேகலை காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே வழக்கில் வந்தமை வியப்பன்றோ? காந்தன் அகத்தியர் யோசனை கேட்டுக் காவிரியாற்றைத் தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான் எனக் கோடல் பொருத்தமாகும். இதனையே,
“மேற்குயரக்,
கொள்ளும் கிடக் குவடு டறுத்திழயத்
தள்ளும் திரைப்பொன்னி தந்தோனும்”
என வரும் விக்கிரம சோழன் உலா அடிகள் உணர்த்துகின்றனவோ? பூம்புகாரை அடுத்த நாட்டில் தவம் செய்து கொண்டிருந்த கவேரன் என்ற சோழ மன்னன் வேண்டுகோளால் சோணாடு புக்கமையின் காவிரி, அவன் பெயரால் காவிரி எனப்பட்டது என்று, ‘காந்தன் காவிரி கொணர்ந்தான்’ என்று கூறிய மணிமேகலை ஆசிரியரே கூறியுள்ளதும் இங்கு நோக்கற்பாலது.
காகந்தி காடு
காந்தன் கந்தனிடம் பூம்புகாரை ஒப்புவித்த பொழுது, “இந்நகரை நின் பெயரால் ‘காகந்தி’ என்று பெயரிட்டுப் பாதுகாப்பாயாக” எனக் கூறினன் என்று மணிமேகலை கூறுகிறது. அன்று முதல் பூம்புகார்க்குரிய பல பெயர்களில் ‘காகந்தி’ என்பதும் ஒன்றாகக் கொள்ளப்பட்டதாம்.
நெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையம் (கூடூர்த் தாலுக்கா) பாவித்திரி எனச் சங்க காலத்திற் பெயர் பெற்றிருந்தது. அதனைச் சுற்றியுள்ள நாடு ‘காகந்தி நாடு’ என அங்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளிற் கூறப்பட்டுள்ளது. அஃது ஒரு காலத்தில் கடலால் கொள்ளப்பட்டிருந்ததால் ‘கடல் கொண்ட காந்தி நாடு’ எனவும் பெயர் பெற்றதாம்.[7] இவ்விரிடங்கட்கும் உள்ள தொடர்பு ஆராயத் தக்கது.
4. தாங்கெயில் எறிந்த செம்பியன்
பெயர்க் காரணம்
இச்சோழ மன்னன், ‘வானத்தில் அசைந்து கொண்டிருந்த பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன்’ ஆதலின், ‘தூங்கு எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ எனப் பெயர் பெற்றான். இவன் அழித்த அரண்கள் மூன்று எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது.
சிறந்த வீரன்
இவன் சிறந்த வீரன் என்பது சங்ககாலப்புலவர் கருத்து. இவனை நினைவூட்டித் தம் சோழ அரசர்க்கு வீரவுணர்ச்சி ஊட்டல் அப்புலவர் வழக்கமாக இருந்தது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற பிற்காலச் சோழ மன்னன் ஒருவனைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையர் என்ற பெண்பாற் புலவர்,
“....................... சார்தல் ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் தூங்கெயில் எறிந்தநின் ஊங்கனோர் நினைப்பின் அடுதல்நின் புகழும் அன்றே”[8] |
இந்திர விழா
‘இச்சோழனே அகத்திய முனிவரது கட்டளையால் காவிரிப்பூம் பட்டணத்தில் முதன்முதல் இந்திரனுக்கு விழாச் செய்தான்; அவ்விழாக் காலமாகிய 28 நாள்களிலும் தன் நகரில் வந்து உறையுமாறு இந்திரனை வேண்டினன்; இந்திரன் அதற்கு இசைந்தான்’[9] என்று மணிமேகலை குறித்துள்ளது.
இவனைக் குறித்துள்ள நூல்கள்
இவன் துரங்கெயில் எறிந்த செயலைப் புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் குறித்துள்ளன.
“தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை நாட நல்லிகை நற்றேர்ச் செம்பியன்.” |
- சிறுபாணாற்றுப்படை |
“தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை” |
- சிலப்பதிகாரம் |
“வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால்” |
- பழமொழி |
"தேங்கு தூங்கெயில் எறிந்த அவனும்” |
- க. பரணி |
"...................... கூடார்தம் துங்கும் எயில் எறிந்த சோழனும்” |
- மூவருலா |
- ↑ 7. Dr.S.C. Iyengar’s ‘Manimekalai - in its Historical Setting,’ pp. 48-49.
- ↑ 8. புறம், 39.
- ↑ 9. மணிமேகலை விழாவறை காதை.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர் - History of Chola - சோழர் வரலாறு - எறிந்த, மணிமேகலை, காவிரி, சிலப்பதிகாரம், இவன், பெயர், மன்னன், செம்பியன்