சக்கரங்கள் - துரியம் (Sahasrara)
குண்டலினி | சக்கரங்கள் | நாடிகள் | ஸ்ரீ சக்கரம் | யந்திரங்கள் |
அமைப்பு : ஆயிரம் தாமரை இதழ்கள், ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்டது. ஜோதிர் லிங்கத்தை மையத்தில் உடையது.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து வெளிக் கிளம்புகின்றன.
இடம் : உச்சந்தலை
ஆண் தெய்வம் : -
பெண் தெய்வம் : -
மிருகம் : -
சம்பந்தப்பட்ட உறுப்புகள் : மூளை
பீஜமந்திரம் : ஓஹும் சத்யம் ஓம்
பலன்கள் : இந்தச் சக்கரம் நன்கு மலர்ந்தால், பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லும். இந்த சக்கரமமானது பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மையானது சதுரியம் முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.
|
‹‹ முன்புறம் | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துரியம் - Sahasrara - சக்கரங்கள் - Chakras