விஷ்ணு புராணம் - பகுதி 23 - பதினெண் புராணங்கள்
மன்னர் உக்கிரசேனர் இரும்பு உலக்கையைப் பொடி செய்த பொழுது, பொடியாகாத ஒரு பகுதியைக் கடலில் தூக்கி எறிந்தார் அல்லவா? அதனை ஒரு மீன் உண்டது. அந்த மீனை ஒரு வேடன் பிடித்து அரியும்பொழுது அதில் இருந்து இரும்புத் துண்டை எடுத்து ஒர் அம்பாகத் தீட்டினான். படுத்திருந்த கிருஷ்ணனின் பாதம் ஒரு மான் போல அந்த வேடனுக்குத் தெரியவே, தான் தீட்டி வைத்திருந்த அம்பை மான் என்று நினைத்து கிருஷ்ணன் பாதத்தில் ஏவி விட்டான். அதனால் கிருஷ்ணன் இறக்க நேரிட்டது. தான் எய்த அம்பு கிருஷ்ணனின் மேல் பாய்ந்து விட்டது என்று அறிந்த வேடன் கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டான். கிருஷ்ணன் அவனை மோட்சத்துக்கு அனுப்பிவிட்டான்.
துவாரகைக்கு வந்த அருச்சுனன் கிருஷ்ணன், பலராமன், யாதவர்கள் இறந்ததைக் கண்டு அவர்களுக்கு இறுதிக் கடன் செய்தான். உக்கிரசேனர், வசுதேவர், தேவகி, ரோகிணி முதலானோர் தீப்பாய்ந்து தங்கள் வாழ்நாளை முடித்துக் கொண்டனர். கிருஷ்ணன் வீட்டில் வளர்ந்த பாரிஜாத மரமும், சுதர்மா என்ற மண்டபமும் தேவலோகத்தைச் சென்று அடைந்து விட்டன. இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் கலி யுகம் பிறந்து விட்டது. கடல் கொந்தளித்து கிருஷ்ணனுடைய வீட்டைத் தவிர துவாரகை முழுவதையும் மூழ்கடித்து விட்டது. எஞ்சியவர்களை அழைத்துக்கொண்டு அருச்சுனன் புறப்பட்டுச் செல்கையில், கொள்ளைக்காரர்கள் இவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வளைத்துக் கொண்டார்கள். அருச்சுனன் தன் வில்லை எடுத்தான். ஆனால் அம்பு எய்யும் சக்தியை இழந்துவிட்டதை அறிந்து கொண்டான். கிருஷ்ணன் போன பிறகு தன் பலம் முழுவதும் போய்விட்டது என்பதை அருச்சுனன் உணர்ந்தான்.
கலியுகம்
கலியுகம் பிறந்து விட்டதால் அது எவ்வாறு இருக்கும் என்று மைத்ரேயி கேட்க பராசர முனிவர் பதில் சொல்ல ஆரம்பித்தார். தர்ம சாத்திரங்களில் சொல்லப்பட்ட வர்ணாச்சிரம தர்மம் கலியுகத்தில் பின்பற்றப்பட மாட்டாது. கடவுளை ஒருவரும் வழிபட மாட்டார்கள். குரு சிஷ்யர் களுக்கிடையே உள்ள உறவு முறிந்துவிடும். தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆவான். பெண்கள் கூந்தலை அழகு செய்வதிலேயே காலம் தள்ளுவர். பணம் பாதாளம் வரை பாயும். பணத்தைப் பிறர் பொருட்டுச் செலவு செய்யாமல், செல்வந்தர்கள் தன்னலத்திற்கே அதைப் பயன்படுத்துவார்கள். பணத்தை அறவழிகளில் சம்பாதிக்காமல் தீய வழிகளிலேயே சேர்ப்பார்கள். ஆண்கள் சாப்பிடுமுன் குளிக்கக்கூட மாட்டார்கள். ஆண்களும், பெண்களும் குட்டையாகி விடுவர். பெண்கள் கணவனுக்குப் பணிந்து நடக்க மாட்டார்கள். அரசர்கள் குடிமக்களைக் காப்பாற்ற மாட்டார்கள். அதற்கு பதிலாக வரி என்ற பெயரில் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொள்வர். இளமையிலேயே முதுமை அடைவர். யாரும் விஷ்ணுவை வணங்க மாட்டார்கள்.
சத்திய யுகத்தில் பத்து ஆண்டுகள் தவம் செய்து பெறும் பயனை- திரேதாயுகத்தில் ஒர் ஆண்டிலும், துவாபரயுகத்தில் ஒரு மாதத்திலும், கலியுகத்தில் ஒரு நாளிலும் தவம் செய்து அதே பலனை அடைய முடியும். இதுவே கலியின் சிறப்பு அம்சமாகும்.
பிரளயங்கள்
மூன்று வகையான பிரளயங்கள் உண்டு. முதலாவது பிரளயம், பிரம்மனுடைய ஒரு நாள் கழிந்தவுடன் நடைபெறுவ தாகும். இதற்கு நைமித்திக்க பிரளயம் என்று பெயர். இந்தப் பிரளயம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 23 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கிருஷ்ணன், மாட்டார்கள், அருச்சுனன், பிரளயம், விட்டது