விஷ்ணு புராணம் - பகுதி 21 - பதினெண் புராணங்கள்
கிருஷ்ணனின் பதினாறு ஆயிரம் மனைவியர்க்கு ஒர் இலட்சத்து எண்பது ஆயிரம் மக்கள் தோன்றினர். அவருள் ருக்மணியின் மகனான பிரத்யும்னன் முக்கியமானவன். அவன் ருக்மியின் மகளை மணந்து அவனுக்கு அநிருத்தன் என்ற மகன் இருந்தான். இதனிடையில் மகாவலியின் மகனாகிய வனாசுரனுக்கு உஷா என்ற பெண் இருந்தாள். ஒருமுறை உஷா, மகாதேவனையும் பார்வதியையும் வணங்கி, எனக்கு எப்படிப்பட்ட கணவன் வருவான் என்று கேட்டாள். பார்வதி, வைகாசி மாதப் பெளர்ணமி அன்று உன் கனவில் ஒருவன் காட்சி அளிப்பான். அவனே உன் மணாளன் ஆவான் என்றாள். அதுபோலவே உஷா கனவு கண்டாள். ஆனால் அவன் யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய தோழி சித்ரலேகா தேவர்கள், அசுரர்கள் ஆகிய பலருடைய படங்களையும் அவரிடம் காட்டியபொழுது அவர்கள் யாரும் இல்லை. இப்படங்கள் அவள் கனவில் கண்டவன் இல்லை என்று அறிந்தவுடன், பூலோக வாசிகளில் மனிதர்களுள் அரசகுமாரர் படங்களைக் காட்டினாள். அநிருத்தன் படத்தைப் பார்த்து இவன் தான் என்று கூறி விட்டாள். அநிருத்தன் யாரென்று அறிந்த தோழி, துவாரகை சென்று இரகசியமாக அநிருத்தனை அழைத்து வந்து உஷாவிடம் சேர்த்து விட்டாள். அநிருத்தன் வாணாசுர கோட்டைக்குள் நுழைந்தவுடன் கொடி இரண்டாக உடைந்து விட்ட்து. ஆயிரம் கைகளை உடைய வாணாகரன் யாரிடமாவது போர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பொழுது, மகாதேவன், ‘என்று உன்னுடைய கொடி இரண்டாக ஒடிகிறதோ அன்று உன் விருப்பப்படி சண்டை செய்யலாம்' என்று கூறியிருந்தார். இன்று அதிருத்தனுடன் வாணாசுரன் போர் தொடுத்தான். அநிருத்தன் துணையாக யாதவர்கள், பலராமன், கிருஷ்ணன் ஆகியோர் போர் செய்தனர். மகாதேவனும் கார்த்திகேயனும், வாணாசுரன் பக்கம் நின்று போர் செய்தனர். கிருஷ்ணன் சக்கரம் ஏவி வாணாசுரனின் ஆயிரம் கைகளை வெட்டி விட்டான். அவனைக் கொல்ல எத்தனிக்கையில், மகாதேவன் குறுக்கிட்டு அவனுக்கு உயிர்ப் பிச்சை தருமாறு கேட்டார். கிருஷ்ணனும் அதை ஒப்புக் கொண்டான். இறுதியாக உஷா, அநிருத்தன் இருவரும் துவாரகை சென்றனர்.
சம்பாவின் திருமணம்
கிருஷ்ணனின் மகன்களுள் ஒருவனாகிய சம்பா, துரியோதனன் மகளைக் களவாடி மணம் புரியச் சென்று கெளரவர்களால் கைது செய்யப்பட்டான். இதை அறிந்த யாதவர்கள் கெளரவர்கள்மேல் போர் தொடுக்க விரும்பினர். அதைத் தடுத்து பலராமன் தான் தனியாகச் சென்று காரியத்தை முடித்து வருவதாகக் கூறிவிட்டு அஸ்தினாபுரத்து எல்லையை அடைந்தான். பலராமன் வருவதைக் கேள்வியுற்ற பீஷ்மர், கர்ணன், துரியோதனன் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வந்து அவனை வணங்கி வரவேற்றனர். உபசரணை முடிவில் பலராமன் ‘சம்பாவை விடுவித்துத் தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று யாதவர்கள் விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்ட
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 21 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கிருஷ்ணன், போர், அநிருத்தன், இந்திரன், பலராமன், ஆயிரம், வஜ்ராயுதத்தை, அவள், யாதவர்கள், சென்று, விட்டான்