விஷ்ணு புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
ஒருநாள் மாந்தாதா அரசன் தன் பெண்களைக் காண வந்தான். அவர்களில் முதல் பெண் தான் மிகுந்த மகிழ்ச்சி யுடன் இருப்பதாகவும், தன் கண்வன் தன்னுடனேயே இருப்பதால் மற்ற சகோதரிகள் வருந்துவார்கள் என்றே தான் நினைப்பதாகவும் கூறினாள். மற்றொரு மகளிடம் அரசன் கேட்டபோது, அவளும் இதையே கூறினாள். செளபரி முனிவன் தன் தவ வலிமையால் தன்னைப் போல ஐம்பது உருவங்களை உண்டாக்கி இருந்தான். அவனது தவ வலிமை யைக் கண்ட அரசன் அவனை விழுந்து வணங்கினான்.
சில நாட்களுக்குப் பிறகு தன் மக்களிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்த 'செளபரி முனிவன், இந்தப் பாசம் தன்னுடைய தவத்திற்குப் பெரிதும் இடையூறாக இருப்பதை அறிந்து, இது மாயையின் காரணமாகவே ஏற்பட்டது என்று அறிந்து அன்று முதல் விஷ்ணுவை தியானிப்பதிலேயே தன் மீதமுள்ள நாட்களைக் கழித்தான்.
சகர மன்னன் கதை
மாந்தாதாவின் பரம்பரையில் வந்தவன் புருட்சா என்ற அரசன். அவன் காலத்தில் நாகலோகத்தில் வசிக்கும் நாகர்களின் மாணிக்கங்களைத் திருடுவதற்காக கந்தர்வர்கள் நாகலோகத்திற்குள் புகுந்து முற்றுகையிட்டனர். கந்தர்வர்களை எதிர்க்க முடியாத நாகர்கள் விஷ்ணுவை வேண்டிக் கொண்டனர். விஷ்ணு அவர்கள் முன் தோன்றி 'உலகை புகுந்து கொண்டு கந்தர்வர்களை அழிக்கிறேன்' என்று கூறினார். நாகர்கள் நர்மதா என்ற பெண்ணை புருட்சாவிடம் அனுப்பினர். அவள் சென்று புருட்சாவை நாகலோகத்திற்கு அழைத்து வந்து விட்டாள். புருட்சாவின் உடலில் புகுந்து இருந்த விஷ்ணுவின் உதவியால் கந்தர்வர்கள் தோற்கடிக்கப் பட்டனர். புருட்சாவை அழைத்துக் கொண்டு வந்ததற்காக நாகர்கள் நர்மதாவிற்கு நன்றி பாராட்டினர். மேலும் அவளை காலை, மாலை வணங்குபவர்களை விஷம் தீண்டாது, பாம்புகளும் கடிக்காது என்ற வரத்தைப் பெற்றனர்.
அந்தப் பரம்பரையில் வந்தவன் பகு என்ற மன்னன். அவன் மைந்தன் சகரன் ஆவான். பெருவலி படைத்தவனாகிய சகரன் உலகம் முழுவதையும் ஆண்டு ஒர் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினான். அவன் இரு மனைவிகளுள் ஒருத்திக்கு ஒரு மகனும், மற்றொருத்திக்கு அறுபதினாயிரம் மக்களும் பிறந்தனர். இவர்கள் அனைவருமே தீயவர்களாக இருந்தனர். இந்த நிலையில் அஸ்வமேத யாகத்தின் குதிரையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சகர மன்னன் இப்பிள்ளைகளிடம் ஒப்படைத்தான். குதிரை இங்குமங்கும் அலைய, மக்கள் அதன் பின்னே சென்றனர். திடீரென்று குதிரை காணாமல் போய்விட, தேடிச் சென்ற பிள்ளைகள் கீழுலகிற்குக் குதிரை சென்றதை அறிந்தனர். அவர்களும் கீழுலகம் செல்ல, குதிரை ஓரிடத்தில் மேய்ந்து கொண்டிருப்பதையும், அதனருகில் கபிலர் என்ற முனிவர் அமர்ந்திருப்பதையும் கண்டார்கள். அறிவு குறைந்த இப்பிள்ளைகள் முனிவர்தான் குதிரையைத் திருடினார் என்று நினைத்து அவர்மேல் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். முனிவரிடத்திலிருந்து புறப்பட்ட தீப்பிழம்பு பிள்ளைகள் அனைவரையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. இதை அறிந்த சகரன், தன் மூத்த மனைவியின் மகனாகிய அசமஞ்சனின் பிள்ளையைக் கபில முனிவரிடம் அனுப்பினான். அமுஷ்மணன் என்ற அந்தப் பிள்ளை கபில முனிவரிடம் சென்று வணங்கி மிக்க வினயத்துடன் தன்னுடைய தந்தை, சிறிய தந்தைகள் ஆகிய அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வழிசொல்லுமாறு வேண்டிக் கொண்டான். அவன்மேல் இரக்கம் கொண்ட கபிலர் உங்களுடைய பரம்பரையில் ஒரு மன்னன் வரப்போகிறான். அவன் பாகீரதி என்று சொல்லப்படும் கங்கையை தேவ லோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வருவான். இவர்கள் எரிந்த சாம்பலின் மேல் கங்கைத் தண்ணிர் பட்டவுடன் இவர்கள் அனைவரும் மோட்சம் போவார்கள் என்று கூறினார்.
பகீரதன் பரம்பரையில் வந்தவர்களே இராம, இலட்சுமண, பரத சத்ருக்னன் ஆவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 12 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, குதிரை, அரசன், அவன், மன்னன், பரம்பரையில், இவர்கள், சகரன், புகுந்து, நாகர்கள், கொண்டு