விஷ்ணு புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
மீனுவின் தும்மலில் பிறந்தவன் இட்சவாகு. இட்சவாகுவின் மகன் விருக்சி. விருக்சிக்கு மிகவும் தைரியம் வாய்ந்த மகன் பிறந்தான். அவன் பெயர் பரஞ்செயன். ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் நடந்தது. போரில் வெல்ல முடியாத தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். அவர்களிடம் விஷ்ணு, தான் பரஞ்செயன் என்ற பெயரில் பூமியில் அவதரித்திருப்பதாகவும், அவ்வாறு அவதரித்த பரஞ்செயன் தலைமையில் தேவர்கள் அசுரர்களை வெல்ல முடியும் என்றும் கூறினார்.
அதனால் தேவர்கள் பரஞ்செயனிடம் வந்து தங்களுக்குத் தலைமை ஏற்றுப் போரிட வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்குப் பரஞ்செய்ன் இந்திரனின் தோளில் ஏறித் தான் போரிட வேண்டும் என்றும், அதனை தேவர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்குத் தர்ன் தலைமை ஏற்றுப் போரிடத் தயார் என்றும் கூறினான். உடனே இந்திரனும் காளை உருவெடுக்க, அதன்மீது அமர்ந்து அசுரர்களை வென்றான் பரஞ்செயன். தோள் என்ற பொருளுடையது 'ககுத் என்ற சொல். தோளின்மீது அமர்ந்து போரிட்டதால், பரஞ்செயன் அன்று முதல் ககுத்தன்' என்று அழைக்கப் பட்டான்.
ககுத்தனின் வழியில் வந்தவன் யுவனசா என்ற அரசன். நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாமையால், அதற்கு வேண்டிய யாகம் செய்யுமாறு முனிவர்களிடம் கூறினான். சடங்குகள் நடு இரவில் முடிவு பெற்றதால், முனிவர்கள் புனித நீரினை இரவு முழுவதும் ஒரு பானையில் வைத்திருந்தனர். யுவனசாவின் மனைவிக்கு அந்தப் புனித நீரினைக் கொடுத்தால் பலம் வாய்ந்த மகன் பிறப்பான் என்று கருதிய முனிவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருந்தனர். ஆனால் மிகவும் தாகம் எடுத்த காரணத்தினால், அப்பானையில் உள்ள நீர் புனித நீர் என்பதை அறியாத மன்னன் யுவனசா அதைக் குடித்து விட்டான். இதனால் ஒரு குழந்தை யுவனசாவின் உடலில் புகுந்து மேலும், மேலும் பெரிதாக வளர்ந்தது. அக்குழந்தை இவ்வுலகில் ஜனனம் செய்யவேண்டிய வேளை யில் அம்மன்னனின் வலது பக்கத்தைப் பிளந்துகொண்டு இவ்வுலகிற்கு வந்தது. ஆனால் மன்னன் இதனால் இறக்க வில்லை. ஆயினும் அக்குழந்தைக்குத் தாய் யார் என்ற கேள்வி எழுந்தது. இச்சூழ்நிலையில் இந்திரனே அக் குழந்தைக்குத் தாயாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டான். அக்குழந்தை “மாந்தாதா என்று பெயர் பெற்றது. இந்திரன் வளர்த்ததால் அக்குழந்தை ஒரே நாளில் முழு வளர்ச்சி அடைந்தது. முழு உலகத்தையும் அவனே ஆட்சி செய்தான்.
மாந்தாதாவின் காலத்தில் செளபரி என்ற முனிவன் பன்னிரண்டு ஆண்டுகள் நீருக்கு அடியில் வாழ்ந்து வந்தான். நீரில் மீன்களின் அரசன் தன் குழந்தைகள், பேரக் குழந்தை களுடன் விளையாடுவதைப் பார்த்தான். உடனே தானும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள், பேரக் குழந்தைகள் பெற வேண்டுமென விரும்பினான். மாந்தாதா அரசனுக்கு ஐம்பது பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டான். ஆனால் வயது முதிர்ந்த தோற்றம் உடைய முனிவனுக்குத் தன் மகளை மணம் செய்து கொடுக்க விரும்பாத அரசன், காரணத்தைக் கூறினால் தன்னைச் சபித்து விடுவானோ என்று நினைத்தான். அதனால் அம்முனிவரிடம் தங்கள் குல வழக்கப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் மணமகனுக்கே மணமுடிப்பதாகக் கூறினார். ஆனால் அரசனின் எண்ணத்தைத் தெரிந்து கொண்ட முனிவன் ஒருமுறை அரசனது மகளைப் பார்க்க அனுமதி கொடுத்தால் அவர்களைப் பார்ப்பதாகவும், அவர்களில் யாரேனும் தன்னை விரும்பினால் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினான். அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டால் தான் சென்று விடுவதாகவும் கூறினான். இதற்கு அரசனும் ஒப்புக் கொண்டான். மிகுந்த தவ வலிமையுடைய செளபரி முனிவன், அரசனது பெண்களைப் பார்க்கச் செல்லுமுன் தன்னை மிகுந்த அழகுள்ள இளைஞனாக மாற்றிக் கொண்டான். அவ்வாறே ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து வர அவர்கள் அ ைஎவரும் தனித்தனியே அவனை விரும்பினர். அவர்கள் அனைவரையும் மணந்து கொண்டு தன்னுடைய ஐம்பது மனைவிகளையும் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்ற முனிவன், விஸ்வகர்மாவை அழைத்து ஒவ்வொருவருக்கும் அழகிய மாளிகை அமைக்கச் சொன்னான். ஒவ்வொரு மாளிகையிலும் நீர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 11 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பரஞ்செயன், முனிவன், தேவர்கள், கூறினான், கொண்டான், அக்குழந்தை, குழந்தைகள், செய்து, நீர், அரசன், தான், என்றும், ஒப்புக், மகன், புனித