ஸ்கந்த புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
இந்த நிலையில் ஸ்கந்தன் போர்க்களத்தில் புகுந்தார். இருவருக்கும் இடையே பெரும் போர் தொடங்கிற்று. வலிமை வாய்ந்த ஆயிரக்கணக்கான ஆயுதங்களை அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் பிரயோகித்துக் கொண்டனர். ஆனால் இந்த ஆயுதங்களால் இருவருக்கும் ஒரு தீங்கும் உண்டாகவில்லை. ஒருமுறை தாரகன் எய்திய ஈட்டி கந்தன் மார்பில் பட அவர் மயக்கமாக, ஆனால் மறு விநாடியே சுயநிலை வரப்பெற்றுப் போருக்குத் தயாரானார். கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள். முனிவர்கள் ஆகியோர் ஆகாயத்தில் கூடி நின்று இந்தப் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்லுங்கள் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த ஸ்கந்தன் 'அஞ்ச வேண்டா. மிகவும் சமர்த்தனான இந்த அசுரனை நான் கொன்றுவிடுவேன்’ என்று கூறிவிட்டு அவர் வேலை எறிய அது தாரகன் தலையை வெட்டிற்று, என்று கூறுவது ஒரு புராணம். (வேவினால் குத்தலாமே தவிர தலையை வெட்டுவது இயலாத காளியம் என்ற கருத்தை மனத்தில் கொண்டு இரண்டாவது வகை ஸ்காந்தம் முருகன் வேலை எறிந்தான் என்றும், அது தாரகன் மார்பைக் கழித்தது என்றும், அது கழித்ததோடல்லாமல் அவனை பூமியில் தள்ளி பூமிக்குள்ளும் அந்த வேல் சென்றது. வேல் துவாரமிட்ட இடத்தில் தண்ணர் குபுகுபுவென்று பாய்ந்தது என்றும் கூறுகிறது.)
வெற்றி பெற்ற ஸ்கந்தனைப் பார்வதி மடியில் எடுத்து வைத்துக் கொண்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
பிரலம்பன் போர்
தாரகனுடன் சண்டை ஆரம்பித்தவுடன் அவன் படையைச் சேர்ந்த பிரலம்பன் என்ற அசுரன் பாதாளலோகம் (நாக லோகம்) சென்று அங்கிருந்து பாம்புகளைக் கொன்று கொண்டிருந்தான். நாகலோகத்திற்கு உரியவனான சேஷனும், அவன் உடன் இருந்தவர்களும் ஸ்கந்தனைப் பார்க்க தேவருலகம் வந்து விட்டனர். இந்த நிலையில் நாகர்கள் கொல்லப் படுவதைக் குமுதா என்பவன் சேஷனிடம் கூறினான். சேஷன் முருகனை வேண்டிக் கொள்ள முருகன் இங்கிருந்தபடியே வேலை ஏவ, அது நாகலோகம் சென்று பிரலம்பனைக் கொன்றது. இப்பணி முடித்த முருகனுடைய வேல் பாதாள லோகத்தில் தோன்றிப் பாதாள கங்கையில் குளித்துவிட்டு முருகனிடம் வந்து சேர்ந்தது. வேலினால் உண்டாக்கப்பட்ட ஆற்றிற்கு ‘சித்தகுபா’ என்று ஸ்கந்தன் பெயரிட்டார்.
வலா என்ற அசுரனின் மகனாகிய வனா என்பவன் முருகனுக்கு பயந்து கிரெளஞ்ச மலையை அடைந்து அதில் ஒளிந்திருந்தான். கிரெளஞ்ச மலையில் வனாவைப் போன்ற கொடியவர்கள் பலர் மறைந்து வாழ்ந்து வந்தனர். முருகன் வேலை ஏவ, அதனால் கிரெளஞ்சம் துளைக்கப்பட்டபொழுது வனா முதலிய அசுரர்கள் கொல்லப்பட்டனர். (இந்த இரு கதைகளும் விஷ்ணு புராணத்தில் இடம் பெற்றுள்ள கதைகளாகும். அங்கு இவர்கள் இருவரையும் கிருஷ்ணன் கொன்றான் என்று சொல்லப்படுகிறது. எல்லாப் புராணங்களில் இருந்தும் அதிக
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 8 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தாரகன், ஒருவர், வேலை, முருகன், என்றும், வேல், ஸ்கந்தன், வந்து, நிலையில், அவர்