ஸ்கந்த புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
இந்திரன் எங்கே ?
இந்திரன் அரண்மனையில் யாகம் நடந்து கொண்டிருந்தது. அந்த யாகத்தை முன்னின்று நடத்தியவன் விஸ்வகர்மாவின் மகன் விஸ்வரூபன். இந்த விஸ்வரூபனுக்கு அசுரர்கள் மேல் ஒரளவு அன்பு இருந்தது. இதன் காரணமாக யாகத்தில் பலியிடும்போது தேவர்களுக்கு பலியிடுகையில் கூடவே அசுரர்களுக்கும் பலியிட்டு வந்தான். இந்த ரகசியத்தை அறிந்து கொண்ட இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் விஸ்வரூபனைக் கொன்றுவிட்டான். விஸ்வகர்மாவும், விஸ்வரூபனும் பிராமணர்கள். ஆகையால் பிராமணனைக் கொன்ற பிரம்ம ஹத்தி தோஷம் இந்திரனைப் பிடித்துக் கொண்டது. மிக்க கடுமையான பிரம்மஹத்தியால் துரத்தப்பட்ட இந்திரன் எங்கு சென்றும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு குளத்திற்குச் சென்று நீருக்கடியில் மறைந்து கொண்டான். அவன் வெளியே வரும்பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி காத்துக் கொண்டிருந்தது. அமர லோகத்தில் இந்திரன் இல்லாமையால் அரசன் இல்லாத மூன்று லோகங்களும் துன்பத்திற்குள்ளாயின. பஞ்சம், வறட்சி, பசி என்பவை அனைவரையும் பிடித்து வாட்டலாயிற்று. நாரதரின் அறிவுரையின் பேரில் நகுஷன் என்பவன் இந்திரனாக்கப் பட்டான். ஆனால் அவன் அகஸ்தியரால் சபிக்கப்பட்டு பாம்பாக மாறிவிட்டான். அடுத்து யயாதியை இந்திரனாக்க முயன்றனர். அளவு மீறிய தற்பெருமை உடைய அவன்தான் இதுவரை செய்த நற்காரியங்களைத் தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்திரப்பதவி தன்னைத் தேடிவந்தது தன் புண்ணியத்தின் காரணமாகத்தான் என்று பெருமைப்படத் தொடங்கினான். இதனால் அவனுக்கும் இந்திரப்பதவி நிலைக்கவில்லை. வேறு வழியின்றிப் பழைய இந்திரனையே கொண்டு வர வேண்டுமென்று தேவர்கள் முடிவு செய்தனர். நாரதர் பழைய இந்திரனைக் கூப்பிட்டவுடன் அவன் பிரம்மஹத்தி யிடம் நிலைமையை விளக்கினார். பிரம்மஹத்தி இந்திரனை விட்டால் எனக்கு இடம் எங்கே என்று கேட்க, தண்ணிர் ஒடுகின்ற ஆறு, அதன் பக்கத்தில் உள்ள மரம், பூமியில் ஏதாவது ஒரு பகுதி, ஏதாவது ஒரு பெண் இந்த நான்கிலும் பிரம்மஹத்தி வாழலாம் என்று கூறியவுடன், பிரம்மஹத்தி இந்திரனை விட்டு விட்டது.
இந்திரனைக் கொண்டு வந்து மிக்க ஆடம்பரத்துடன் முடிசூட்டினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 10 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கொண்டு, சிவன், பிரம்மஹத்தி, இந்திரன், அவன், பழைய, தவம், மிக்க, சென்று, பார்வதி