பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
பிரகருதி பரமாத்மாவினுள் ஐக்கியப்பட்டது. அது தனித்து இயங்குவதில்லை. பொன்னில்லாமல் ஒரு பொற்கொல்லன் எப்படி ஆபரணங்கள் செய்ய முடியாதோ, அதேபோல, குயவன் மண்ணில்லாமல் பானைகள் செய்ய முடியாதோ அதுபோல பிரகருதி இல்லாமல் பரமாத்மா படைத்தல் தொழிலைச் செய்ய முடியாது. தொடக்கத்தில் கிருஷ்ணன் தன்னையே இரண்டாகப் பிரித்துக் கொண்டான். வலப்பகுதி ஆணாகவும், இடப்பகுதி பெண்ணாகவும் வடிவெடுத்தான். இப்பிரகருதியே ராதா என்றும், ராதிகா என்றும் வழங்கப் படுவர்.
(இதன் பிறகு பிரம்ம வைவர்த்த புராணம் சரஸ்வதி கங்கை பத்மாவதி ஆகிய ஆறுகளின் தோற்றத்தையும், கலியுகத்தில் ஏற்படப்போகும் அதர்ம வளர்ச்சியையும் கல்கியின் தோற்றத்தையும், அதன்பிறகு ஏற்படப் போகும் பிரளயத்தையும் விரிவாகப் பேசுகிறது. பிரளயத்தின் முடிவில் மறுபடியும் சத்ய யுகம் வரப்போகிறது என்றும் இப்புராணம் கூறுகிறது).
வகந்தராவின் கதை
அடுத்தபடியாக நாராயண முனிவர் நாரதருக்கு வசுந்தரா அல்லது பிருத்வியின் கதையைச் சொல்லத் தொடங்கினார். இதுவரை மது, கைடபர்களைக் கொன்று அவர்கள் தசையினை எடுத்துக் கிருஷ்ணன் பூமியை உண்டாக்கினார் என்ற கதை வழங்கி வந்தது. இந்தக் கதையை நான் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. மது கைடபர்கள் தண்ணீர் இல்லாப் பகுதியில் தங்களைக் கொல்லவேண்டும் என்று எப்பொழுது வேண்டிக் கொண்டார்களோ அப்பொழுதே தண்ணிர் இல்லாத பகுதியும் உண்டு. அதாவது பூமியும் உண்டு என்பதை அக்கதை ஏற்றுக் கொள்கிறது. என்னைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருந்த பூமி அளவால் சிறியதாக இருந்திருக் கலாம். மது கைடபர்களின் சதையை நீர்ப்பகுதியில் போட்டு அதை உயர்த்தி பூமியோடு சேர்த்திருக்கலாம். அப்படியானால் இவர்கள் வதத்திற்குப் பிறகு பூமியின் அளவு பெரிதாக ஆகியிருக்கலாம். மது கைடபர்கள் சதையில் இருந்து பூமியின் ஒரு பகுதி வந்ததால் அதற்கு மேதினி என்ற பெயர் வந்தது. (மேதா என்றால் சதை என்று பொருள்)
இதன் பிறகு பிரம்ம வைவர்த்த புராணம் பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு வகை உற்பத்தியை அடுத்தடுத்து கூறிக் கொண்டு செல்லுகிறது. இதன்படி முதல்வகை உற்பத்தி வரலாறு இங்கு தரப் பெறுகிறது.
தொடக்கத்தில் எங்கும் நீரே நிறைந்திருக்க, கிருஷ்ணன் மிகப் பெரிய வடிவத்துடன் தண்ணிரில் பல்லாயிரம் வருடங்கள் மிதந்து கொண்டே இருந்தார். எங்கும் இருந்த தூசியும் புழுதியும் கிருஷ்ணன் உடலில் படிந்து படிந்து இறுகிப் போய் அதுவே பூமியாக மாறியது.
இரண்டாவது வகை உற்பத்தி வரலாறு வருமாறு: பிரளய காலத்தில் பூமி நீருக்குள் மூழ்கி விடுகிறது. இத்தகைய பிரளயம் பிரம்மாவினுடைய ஒரு நாளின் இறுதிப் பகுதி ஆகும். பிரம்மாவின் மறுநாள் விடியும் பொழுது, மறுபடியும் உற்பத்தி தொடங்குகிறது. அப்போது தண்ணிருக்குள் மூழ்கிப் போன பூமியை மேலே கொண்டு வருமாறு விஷ்ணுவை வேண்டிக் கொள்கிறார் பிரம்மன். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து நீருக்குள் சென்று பூமியைத் தன் கொம்புகளுக்கிடையே வைத்து மேலே தூக்கிக் கொண்டு வருகிறார்.
(இதைத் தொடர்ந்து வரும் கங்கையின் கதை மற்றப் புராணங்களில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது,)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 7 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கிருஷ்ணன், உற்பத்தி, கொண்டு, என்றும், செய்ய, பிறகு