அக்னி புராணம் - பகுதி 21 - பதினெண் புராணங்கள்
ஆண்வாரிசு இல்லாமல் ஒருவன் இறந்தால், அவனுக்குக் கடன்கள் இருந்தால் அவன் சொத்துக்களுக்கு யார் உரிமை ஆகிறார்களோ, அவனே அக்கடன்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாரிசாக உள்ள ஆண்மகன் சொத்தை ஏற்கும் பொழுது, கடனையும் ஏற்க வேண்டும். ஆனால் கணவனோ, மகனோ கொண்ட கடனுக்கு மனைவி பொறுப்பாளி ஆகமாட்டாள். ஆனால் கணவனும் மனைவியும் சேர்ந்து கடன் வாங்கி இருந்தால், அப்பொழுது கணவனுக்குப் பிறகு மனைவி பொறுப்பாளி ஆவாள். சாட்சி இல்லாமல் கடன் கொடுக்கப் பட்டிருந்தாலும், அக்கடன் உண்மையாகவே கொடுக்கப்பட்டது என்று அரசன் நம்பினால் 64 நாட்களுக்குள் அக்கடனைத் திருப்பித் தர உத்தரவிடலாம். பொய் வழக்குக் கொண்டு வந்தான் எனத் தெரிந்தால், அவ்வழக்கைக் கொண்டு வந்தவனுக்கும், அதற்குச் சாட்சி கூறியவனுக்கும் தக்க தண்டனை வழங்கப்படும். பொய் சாட்சி கூறும் பிராமணன் நாடு கடத்தப்படுவான். ஒருவன் சாட்சி கூறுகிறேன் என்று ஒத்துக்கொண்டு, பிறகு பின்வாங்கினால், பொய் வழக்குப் போட்டவனுக்குக் கிடைக்கும் தண்டனையைப்போல் எட்டு மடங்கு அதிக தண்டனை கிடைக்கும். கடன் கொடுக்கும் பொழுது, கொடுப்பவன், பெறுபவன், சாட்சிகள் ஆகிய அனைவர் பற்றியும் முழு விபரங்கள் எழுத்தில் எழுதப்பட வேண்டும். கடன் பெற்றவர் தவணைமுறையில் கடனைத் திருப்பித் தந்தால், அத்தவணைகள் அனைத்தும் மூலக் கடிதத்தில் வரையப்பட வேண்டும். கடன் கொடுக்கும் பொழுது, சாட்சிகளின் எதிரே கொடுக்கப்படுவது போல, கடனைத் திருப்பி அடைக்கும் பொழுதும் சாட்சிகளை வைத்துக் கொண்டே திருப்பிக் கொடுக்க வேண்டும். சாட்சி கூற முன்வருபவர் தலையில் பஞ்சு, நெருப்பு, நீர், விஷம் இவற்றுள் ஏதாவதொன்றை வைத்துக் கொண்டுதான் சாட்சி சொல்ல வேண்டும்.
பொய்சாட்சி கூறுபவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழி உண்டு. ஏழு ஆல இலைகளை அடுக்கி அதன் மேல் ஒரு நெருப்புத் துண்டை வைத்துக் கொண்டு அக்னியை ஏழு முறை வலம் வரவேண்டும். அவர் கை வேகவில்லையானால் உண்மை கூறுகிறார் என்றும், இவைகளைத் தாண்டி நெருப்பு கையைச் சுட்டால் பொய் சாட்சி கூறுகிறார் என்றும் தெரிந்து கொள்ளலாம். சாட்சி கூறுபவனைத் தண்ணீருக்குள் அமுக்கி வைத்து அவன் சாகவில்லையானால் உண்மை சொல்கிறான் என்றும், செத்துவிட்டால் பொய்சாட்சி கூறினான் என்றும் அறியலாம்.
இறக்கும் ஒரு தந்தை, உயில் எழுதி வைத்திருந்தால் அதன்படி அவன் சொத்துப் பிரிக்கப்படும். அப்படி இல்லாமல் பிள்ளைகள் அனைவருக்கும் சமமான பங்கு கிடைப்பதானால் அவன் மனைவிக்கும் சமமான பங்கு ஒன்று உண்டு. இவ்வாறில்லாமல் தந்தை தன் சொத்து முழுவதையும் மூத்த மகனிடம் விட்டுச் செல்வதும் உண்டு. பாட்டனின் சொத்து தந்தைக்கும், மூத்த மகனுக்கும் சமமாகக் கிடைக்கும். பாட்டனார் சம்பாதிக்காமல் தந்தையால் மட்டும் சம்பாதிக்கப் பட்ட பொருள் மகனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மகன் பிறப்பதற்கு முன்னேயே பாட்டனுக்கும், தந்தைக்கும் ஏற்கெனவே சொத்து பிரிக்கப்பட்டிருந்தால் மகன் பிறந்த பிறகு தந்தைக்குக் கிடைத்த சொத்தில் சம பங்கு பிள்ளைக்கு வரும். பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. ஆனால் சொத்தைப் பெற்றுக்கொண்ட ஆண் வாரிசுகள், தங்கைமார்களுக்குத் திருமணம் செய்ய, தங்களுக்குக் கிடைத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு செலவிட வேண்டும்.
புரான தானம்
இனி அக்னி புராணம் புராணங்களை தானமாகக் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பேசுகிறது. புராணங்களை தானமாகக் கொடுக்கும் பொழுது, பசுவையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு புராணத்திலும் உள்ள சுலோகங்கள் எத்தனை என்று அக்னி புராணம் கூறுகிறது. பிரம்ம புராணம்-25000; பத்ம புராணம்-12000; விஷ்ணு புராணம்-13000; வாயு புராணம்-14000;
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 21 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், சாட்சி, புராணம், கடன், பங்கு, என்றும், பொய், அவன், பொழுது, உண்டு, சொத்து, கொண்டு, பிறகு, இல்லாமல், கிடைக்கும், கொடுக்கும், வைத்துக்