ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 18
2 முன்பு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தும், இப்பொழுது உம் பரிசுத்தர்கள் எகிப்தியர்களுக்குத் திருப்பிக் கெடுதியேதும் செய்யாததைத் குறித்து எகிப்தியர்கள் நன்றியுணர்வு காட்டினர். தாங்கள் செய்த தீமைகளுக்காக மன்னிப்பு வேண்டினர்.
3 இருளுக்குப் பதிலாய்த் தீப் பிழம்பான தூண் ஒன்றை அவர்களுக்குத் தந்தீர். முன்பின் அறியாத வழியில் அது அவர்களுக்கு வழி காட்டிற்று@ மகிமை பொருந்திய பயணத்திற்கு அத்தூண் வெம்மை தணிந்த கதிரவன் போல் இருந்தது.
4 திருச்சட்டத்தின் அழியாத ஒளி உம் மக்கள் வழியாய் உலகிற்கு அளிக்கப்பட வேண்டியிருந்தது@ அவர்களை எகிப்தியர் சிறையில் அடைத்து வைத்ததால், இவர்கள் வெளிச்சம் பெறாமல் இருளில் அடைக்கப்படவேண்டியது நியாயமே.
5 அவர்கள் உம் பரிசுத்தர்களின் குழந்தைகளைக் கொல்லத் தீர்மானித்த போது, ஒரு குழந்தை மட்டும் கைவிடப்பட்டு அதன் பின் காப்பாற்றப்பட்டது@ அவர்களைத் தண்டிப்பதற்காக அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளை மாய்த்துவிட்டீர்@ அவர்கள் அனைவரையும் பெருவெள்ளத்தால் ஒருமிக்க மூழ்கடித்துவிட்டீர்.
6 தாங்கள் நம்பிக்கை வைத்திருந்த வாக்குறுதிகளை மெய்யாகவே அறிந்து அவற்றில் துணிவோடு மகிழ்ந்திருக்கும்படிக்கு எங்கள் தந்தையர்க்கு அவ்விரவு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
7 நீதிமான்களின் விடுதலையையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்.
8 எங்கள் பகைவர்களைத் தண்டித்த அந்த ஒரே செயலால் எங்களை உம்மிடம் அழைத்து மகிமைப் படுத்தினீர்.
9 நல்லவர்களின் பரிசுத்த மக்கள் மறைவில் பலிகள் தந்தனர்@ நன்மைகளாயினும் தீமைகளாயினும் அவற்றைச் சரிநிகராகப் பகிர்ந்துகொள்வோம் என்று சொல்லி, இறைவனது திருச்சட்டத்திற்குப் பரிசுத்தர்கள் உடன்பட்டனர்@ தந்தையர்களின் புகழ்ப்பாடல்களைப் பாடிப் போற்றினர்.
10 பகைவர்கள் கதறியழும் குரல்கள் எதிரொலித்தன@ தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் புலம்பியழுதது எங்கும் பரவிற்று.
11 அடிமையும் அவன் தலைவனும் ஒரே வகையில் தண்டிக்கப்பட்டனர்@ பொதுமக்களும் அரசனும் ஒரே துன்பத்திற்கு ஆளாயினர்.
12 எண்ணிலடங்காத பேர்கள் ஒரே வகைச் சாவுக்குட்பட்டு எல்லாரும் ஒன்றாக மடிந்து கிடந்தனர்@ உயிரோடிருந்தவர்களால் செத்து மடிந்தவர்களைப் புதைக்கக் கூட இயலவில்லை@ ஒரே நொடியில் அவர்கள் இனத்தாருள் தலைசிறந்தவர்கள் எல்லாரும் மாய்ந்து போனார்கள்.
13 மந்திரவாதிகளின் சொற்களுக்குச் செவிமடுத்து அவர்கள் எதையுமே நம்ப மறுத்துவிட்டாலும், அவர்களுடைய தலைப்பேறுகள் கொல்லப்பட்ட போது, உம் மக்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதை ஏற்றுக்கொண்டனர்.
14 எல்லாம் ஆழ்ந்த அமைதியில் அடங்கியிருக்கையில், இரவு வேளையில் பாதி கடந்தபின் நள்ளிரவு நேரத்தில்,
15 உமது எல்லாம் வல்ல வார்த்தை விண்ணகத்திலுள்ள அரச அரியணையை விட்டுக் கிளம்பி அஞ்சா நெஞ்சம் படைத்த போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் நடுவில் பாய்ந்தது.
16 உமது கண்டிப்பான கட்டளையாகிய கூரிய வாளைக் கையிலேந்தி, வந்து நின்று உலக முழுவதையும் சாவினால் நிரப்பிற்று@ மண்ணுலகில் காலூன்றி விண்ணகத்தைத் தொடும்படி நின்றது.
17 அப்போது உடனே திகிலுண்டாக்கும் கனவுக் காட்சிகள் அவர்களைக் கலங்க அடித்தன@ எதிர்பாராத பேரச்சங்கள் அவர்களைப் பீடித்து வருத்தின.
18 இங்கொருவனும் அங்கொருவனும் குற்றுயிராய் விழும் போது தாங்கள் மடிவதன் காரணத்தைத் தெரியப்படுத்துவார்கள்.
19 ஏனெனில் தாங்கள் அனுபவித்த வேதனைகளின் காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் சாகாதபடி அவர்கள் முன்பு கண்ட கனவுக் காட்சிகளே அதை அவர்களுக்கு முன்னறிவித்தன.
20 சாவின் துன்பம் நீதிமான்களுக்கும் வந்துற்றது@ பாலை நிலத்திலிருந்த மக்கள் கூட்டத்தைக் கொள்ளை நோய் தாக்கிற்று@ ஆயினும் உமது சினம் தொடர்ந்து நீடிக்கவில்லை.
21 ஏனெனில் குற்றமற்றவர் ஒருவர் மக்களுக்காகப் பரிந்து பேசி மன்றாட விரைந்தார்@ தமது திருப்பணியென்னும் படைக்கலத்தைத் தாங்கி, மன்றாட்டையும் பரிகாரத்திற்கான தூபத்தையும் ஏந்தி, உம் சினத்தைத் தடுத்து நின்று அழிவை முடிவுறச் செய்தார். இதனால் அவர் உம் ஊழியர் என்பதைக் காட்டினார்.
22 உடலின் வலிமையாலோ படைக்கலங்களின் ஆற்றலாலோ, அவர் உமது ஆத்திரத்தைத் தடுத்து நிறுத்தவில்லை@ ஆனால் எங்கள் தந்தையர்க்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் உடன்படிக்கைகளையும் நினைவூட்டித் தம் வார்த்தையால் அந்தத் தண்டனைத் தூதனைத் தடுத்து நிறுத்தினார்.
23 செத்தவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஏற்கெனவே ஒரு குவியலாகிக் கொண்டிருக்கும் போது, அவர் குறுக்கிட்டுக் கடுஞ் சினத்தைத் தடுத்து நிறுத்தி உயிரோடிருக்கிறவர்களிடம் போகாமல் செய்து விட்டார்.
24 அவர் அணிந்திருந்த நீண்ட அங்கி உலக முழுவதையும் குறித்து நின்றது@ அதிலிருந்த மாணிக்கக் கல்வரிசை நான்கிலும் மூதாதையரின் மகிமையான பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன@ அவர் தலையிலிருந்த மணிமகுடத்தில் உமது மாட்சிமிக்கத் திருப்பெயரும் வரையப்பட்டிருந்தது.
25 அழிவு விளைக்கும் தூதன் இவற்றைத் கண்டு அச்சத்தால் பின்வாங்கிக்கொண்டான்@ ஏனெனில் உம்முடைய சினத்தினால் அவ்வளவு சோதிக்கப்பட்டதே அவர்களுக்குப் போதுமான தண்டனையாய் இருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, மக்கள், அவர், ஏற்பாடு, உமது, போது, தடுத்து, தாங்கள், பழைய, எங்கள், ஆகமம், அவர்களுடைய, ஒருவர், ஏனெனில், எல்லாம், கனவுக், சினத்தைத், எல்லாரும், முழுவதையும், நின்று, போல், அவர்களின், எகிப்தியர்கள், ஆன்மிகம், திருவிவிலியம், அவர்களைப், முன்பு, அவர்களுக்கு, குறித்து, பரிசுத்தர்கள், தந்தையர்க்கு