ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 16
2 இத்தகைய தண்டனைக்குப் பதிலாக நீர் உம் மக்களுக்குப் பரிவே காட்டினீர்@ அவர்கள் ஆவலால் விரும்பிய சுவைமிகுந்த காடைகளை அவர்களுக்கு உண்ணக்கொடுத்தீர்.
3 எகிப்தியர் உணவு அருந்த விரும்பிய போதிலும், அவர்கள் மேல் ஏவப்பட்டவை மட்டில் உண்டான அருவருப்பால் அவர்களுக்கு உணவின் மேலிருந்த நாட்டமே அற்றுப்போயிற்று@ ஆனால் உம் மக்களோ குறுகிய காலம் வருந்தின பின் வயிறாரப் பல்சுவையுணவை உண்டார்கள்.
4 ஏனெனில் கொடுமை செய்கிறவர்களுக்கு நிறை செய்ய இயலாத பற்றாக்குறை வரவேண்டியிருந்தது@ உம் மக்களுக்கோ அவர்களுடைய பகைவர்கள் எவ்வாறு வாதிக்கப்படுகின்றனர் என்று மட்டும் காட்ட வேண்டியிருந்தது
5 உம் மக்கள்மேல் கொடிய விலங்குகள் கடுஞ்சீற்றத்தோடு பாய்ந்த போது, நெளிந்து வந்த நச்சுப் பாம்புகளின் கடியால் அவர்கள் அழிந்துகொண்டிருந்த போது.
6 உமது சினம் இறுதிவரை நீடித்துவிடவில்லை. திருந்துவதற்காகச் சில காலமே அவர்கள் தொல்லையுற்றனர்@ பிறகு, உம் திருச்சட்டத்தின் கட்டளையை அவர்களுக்கு நினைவூட்ட மீட்பின் அடையாளமொன்றைப் பெற்றுக் கொண்டனர்.
7 அப்போது அதன் பக்கம் திரும்பியவனுக்கு அவன் பார்த்த பொருள் நலந்தரவில்லை, அனைவர்க்கும் மீட்பரான நீரே நலந்தந்தீர்.
8 எந்தத் தீமையிலிருந்தும் விடுவிக்கிறவர் நீரே என்பதை இதனாலும் எங்கள் மாற்றார்க்கு எண்பித்தீர்.
9 அவர்களோ வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும் கடியுண்டு செத்தார்கள்@ தங்களைக் குணமாக்கிக் கொள்ள அவர்களுக்கு வழியில்லை@ இத்தகைய தண்டனைகள் கிடைத்தல் அவர்களுக்குத் தகும்.
10 ஆனால் நச்சுப் பாம்புகளின் பற்களால் கூட உம் மக்களை வீழ்த்த முடியவில்லை: உமது இரக்கம் அவர்களுக்கு உதவியாய் வந்து குணப்படுத்திற்று.
11 உம் வாக்குகளை அவர்களுக்கு நினைவூட்டவே அவர்கள் அவ்வாறு கடிக்கப்பட்டனர்@ ஆனால் உடனே குணமாக்கப்பட்டனர்@ ஆழ்ந்த மறதியில் மூழ்கி அவர்கள் உம் பரிவை உணராமல் போய்விடாதபடி இவ்வாறு நடந்தது.
12 பச்சிலையோ மருந்தோ அவர்களுக்கு நலந்தரவில்லை@ ஆண்டவரே அனைத்தையும் குணமாக்கும் உம் வார்த்தையே நலந்தந்தது.
13 வாழ்வும் சாவும் உமக்குக் கட்டுப்பட்டவை@ மனிதர்களைக் கீழுலுக வாயில் வரை கொண்டு சென்று திரும்பக் கூட்டி வருகிறவர் நீரே.
14 மனிதனோ தன் தீய குணத்தால் சாவை வருவிக்கலாம்@ ஆனால் பிரிந்து விட்ட ஆவியை மீண்டும் கொண்டு வரவோ, அடைபட்ட ஆன்மாவை விடுவிக்கவோ அவனால் இயலாது.
15 உமது கையிலிருந்து தப்புவது இயலாத ஒன்று.
16 உம்மை அறிந்துகொள்ள மறுத்துவிட்ட பொல்லாதவர்கள்@ உமது கைவன்மையால் வதைக்கப்பட்டார்கள்@ வெள்ளப் பெருக்காலும் கல்மழையாலும் கடும்புயலாலும் துன்புறுத்தப்பட்டுத் தீயால் முற்றிலும் எரிக்கப்பட்டனர்.
17 எல்லாவற்றையும் விட நம்பமுடியாதது எதுவென்றால், அனைத்தையும் தணியச் செய்யும் தண்ணீரில் அந்த நெருப்பு அணையாமல் இன்னும் மிகுதியாய் எரிந்தது தான். ஏனெனில் இயற்கை முழுவதுமே நீதிமான்களுக்காகப் போராடுகிறது.
18 அக்கிரமிகளுக்கு எதிராக அனுப்பப்பட்ட உயிர்களை எரித்து விடாதபடிக்கு நெருப்பு தன் அனலைச் சிலவேளைகளில் குறைத்துக் கொண்டது@ கடவுளின் தண்டனைத் தீர்ப்புதான் தங்களை விரட்டி வருகிறது என்பதை அவர்கள் கண்டறியவே அவ்வாறு நடந்தது.
19 அக்கிரமம் நிறைந்த நாட்டின் விளைச்சலை அழிக்கவே, மற்றும் சிலவேளைகளில் தண்ணீரின் நடுவிலும் நெருப்பு தன் ஆற்றலினும் மிகுந்த வெப்பத்தோடு எரிந்தது.
20 இவற்றுக்கு முற்றிலும் மாறாக, உம் மக்களுக்கு வானதூதர்களின் உணவைத் தந்து உண்பித்தீர். எவ்வகை இனிமையும் சுவையும் தன்னுள் கொண்ட உணவை அவர்களுடைய உழைப்பில்லாமலேயே விண்ணகத்திலிருந்து அவர்களுக்கு உண்ணத் தந்தீர்.
21 நீர் கொடுத்தருளிய அந்த உணவு உம் பிள்ளைகள் மட்டில் உமக்குள்ள இனிமையைக் காட்டிற்று@ ஏனெனில் உண்பவனின் சுவையுணர்வுக்கேற்றவாறு மாறி அவனவன் விரும்பியவாறு சுவை தந்தது.
22 கல்மழையின் போது எரிந்து தூறலில் சுடர்விட்ட நெருப்பு தான் மாற்றாருடைய விளைச்சல்களை அழித்தது என்று அறிந்து கொள்ளவே, பனியும் பனிக்கட்டியும் உருகாமல் தீயின் வெம்மையைத் தாங்கின.
23 ஆனால் அதே நெருப்பு நீதிமான்களை உண்பிக்கும்படிக்குத் தனது இயல்பான வெம்மையையும் மறந்து விட்டது.
24 படைத்தவரான உமக்கு ஊழியம் செய்கிற படைப்புப் பொருள் அக்கிரமிகளைத் தண்டிக்க முனைப்போடு முயல்கிறது@ உம்மை நம்பினவர்களுக்குப் பரிவோடு தளர்ந்து கொடுக்கிறது.
25 ஆதலால் தான் அவ்வுணவும் முன்னாளில் தேவைப்பட்டவர்களின் ஆவலுக்கேற்றவாறு உணவாகி அனைவரையும் உண்பிக்க விரும்பிய உம் திருவுளத்தை நிறைவேற்றிற்று.
26 இதைக் கொண்டு ஆண்டவரே, உம் அன்பைப் பெற்ற உம் மக்கள், மனிதனை உண்பிப்பது வயலில் விளைந்தவையன்று, ஆனால் உமது வார்த்தையே உம்மை நம்பினவர்களைக் காப்பாற்றுகிறது என்பதை அறிந்துகொண்டார்கள்.
27 எது நெருப்பினால் அழிக்கப் படவில்லையோ அது கடந்து செல்லும் கதிரவனொளியால் எளிதில் சூடாகி உருகிற்று@
28 கதிரவன் எழுமுன்பே எழுந்து உமக்கு நன்றி கூறவும், வைகறை வேளையில் உம்மைப் பார்த்து மன்றாடவும் வேண்டுமென்று இதனால் உணர்த்தப்பட்டது.
29 ஏனெனில் நன்றி கெட்டவனின் நம்பிக்கை குளிர் காலத்துப் பனி போல் உருகிவிடும்@ பயனற்ற தண்ணீர் போல் ஓடி வீணாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞான ஆகமம் - பழைய ஏற்பாடு, அவர்களுக்கு, நெருப்பு, உமது, ஏற்பாடு, பழைய, ஏனெனில், உம்மை, போது, ஆகமம், தான், நீரே, என்பதை, விரும்பிய, அந்த, கொண்டு, அனைத்தையும், வார்த்தையே, எரிந்தது, நன்றி, போல், உமக்கு, சிலவேளைகளில், ஆண்டவரே, முற்றிலும், பாம்புகளின், இத்தகைய, நீர், ஆதலால், ஆன்மிகம், திருவிவிலியம், உணவு, மட்டில், பொருள், அவ்வாறு, நச்சுப், அவர்களுடைய, இயலாத, நடந்தது