முதன்மை பக்கம் » ஆன்மிகம் » திருவிவிலியம் - புதிய ஏற்பாடு » கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 4
2 மறைவாக மக்கள் செய்யும் இழிவான செயல்களை வெறுத்துவிட்டோம்@ எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை@ கடவுள் வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை@ உண்மையை வெளிப்படுத்துவது தான் எங்களைப்பற்றி நாங்கள் தரும் நற்சான்று இதுவே கடவுள் முன்னிலையில் நல்ல மனச்சாட்சியுள்ள மனிதர் அனைவருக்கும் நாங்கள் தரும் சான்று.
3 நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி சிலருக்கு இன்னும் மறைபட்டாதாய் உள்ளதென்றால், அழிவுறுவோர்க்கே அது மறைபட்டுள்ளது.
4 கடவுளது சாயலான கிறிஸ்துவினுடைய மாட்சிமை விளங்கும் நற்செய்தியின் ஒளியை அவர்கள் பார்க்காதபடி இவ்வுலகத்தின் தெய்வம் விசுவாசமற்றவர்களின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது.
5 நாங்கள் தூதுரைப்பது எங்களைப்பற்றியன்று, இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் எனத் தூதுரைக்கிறோம். நாங்களோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்களே.
6 ஏனெனில், ~ இருளினின்று ஒளி சுடர்க ~ என்று சொன்ன கடவுள்தாமே கிறிஸ்துவின் முகத்தில் வீசிய இறைமாட்சிமையின் அறிவொளி மிளிரும்படி, எங்கள் உள்ளங்களிலும் ஒளி சுடரச் செய்தார்.
7 ஆயினும், இணையற்ற இவ்வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, கடவுளுக்கே உரியது என்று விளங்கும்படி, இந்தச் செல்வத்தைக் கொண்டிருக்கும் நாங்கள் வெறும் மட்கலங்களாகவே இருக்கிறோம்.
8 எல்லாவகையிலும் வேதனையுறுகிறோம்@ ஆனால், ஒடுங்கிபோவதில்லை. மனக்கலக்கம் அடைகிறோம்@ ஆனால், மனம் உடைவதில்லை.
9 துன்புறுத்தப்படுகிறோம்@ ~ஆயினும், இறைவனால் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்படுகிறோம்@ ஆனால், அழிவுறுவதில்லை.
10 இயேசுவின் வாழ்வு எங்கள் உடலில் வெளிப்படும்படி, போகுமிடமெல்லாம் இயேசுவின் மரணப்பாடுகளைத் தாங்கிச் செல்கிறோம்.
11 ஏனெனில், இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் ஊனுடலில் வெளிப்படும்படி, உயிரோடிருக்கும்போதே இயேசுவுக்காக நாங்கள் எந்நேரமும் சாவுக்குக் கையளிக்கப்படுகிறோம்.
12 இவ்வாறு எங்களுள் சாவும், உங்களுள் வாழ்வும் செயலாற்றுகிறது.
13 ~ விசுவசித்தேன், ஆகவே பேசினேன் ~ என்று எழுதியுள்ளபடி, அதே விசுவாச மனப்பான்மை கொண்டிருக்கும் நாங்களும் விசுவசிக்கிறோம், ஆகவே பேசுகிறோம்.
14 ஆண்டவராகிய இயேசுவை உயிர்ப்பித்தவர், எங்களை இயேசுவோடு உயிர்ப்பித்துத் தம் திருமுன் கொணர்ந்து நிறுத்துவார் என அறிந்திருக்கிறோம்@ அவ்வாறே உங்களையும் நிறுத்துவார்.
15 இவையெல்லாம் உங்கள் நன்மைக்கே. அதனால் மக்களிடையே இறையருள் பெருகப்பெருக, கடவுளின் மகிமைக்காகப் பலருடைய உள்ளத்தில் நன்றியறிதலும் பெருகும்.
16 ஆகவே நாங்கள் உள்ளம் தளர்வதில்லை@ ஆனால், எங்கள் புறவுடலைச் சார்ந்தது அழிந்த வண்ணமாய் இருந்தாலும், உள் மனம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறது.
17 நாம் படும் வேதனை அற்பமானது, நொடிப் பொழுதே நீடிப்பது@ ஆயினும் அது நம்மில், அளவிடமுடியாத நித்திய மாட்சிமையை ஒப்புயர்வற்ற வகையில் விளைவிக்கிறது.
18 ஆனால், காண்பவற்றை அல்ல, காணாதவற்றையே நோக்கியவண்ணமாய் நாம் வாழ்தல் வேண்டும்@ ஏனெனில், காண்பவை நிலையற்றவே@ காணாதவை முடிவற்றவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம் - புதிய ஏற்பாடு, நாங்கள், ஏற்பாடு, எங்கள், கொரிந்தியருக்கு, இயேசுவின், ஏனெனில், எழுதிய, ஆகவே, நிருபம், இரண்டாவது, மனம், வாழ்வு, நாம், நிறுத்துவார், வெளிப்படும்படி, கொண்டிருக்கும், தரும், ஆன்மிகம், திருவிவிலியம், உள்ளம், கடவுள், உங்கள், இயேசுவுக்காக, ஆயினும்