முதன்மை பக்கம் » ஆன்மிகம் » திருவிவிலியம் - புதிய ஏற்பாடு » கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம் - புதிய ஏற்பாடு
அதிகாரம் 13
2 முன்பு பாவம் செய்தவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் ஏற்கெனவே எச்சரிக்கை செய்ததுபோல் மறுபடியும் எச்சரிக்கை செய்கிறேன்.
3 இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்திருந்த போது சொன்னதையே, உங்களோடு இல்லாத இந்த நேரத்திலும் சொல்லுகிறேன்@ என் வழியாய்ப் பேசுகிறவர் கிறிஸ்துவே என்பதை எண்பிக்கவேண்டும் என்கிறீர்கள் அல்லவா? நான் மறுபடியும் வந்தால், அதை எண்பித்துக் காட்டுவேன்@ பரிவு காட்டவே மாட்டேன். கிறிஸ்து உங்கள்பால் வலுக்குன்றியவராகக் காணப்படவில்லை@ உங்களிடையே தம் வல்லமையைக் காட்டினார்.
4 வலுவின்மையால் அவர் சிலுவையில் அறையுண்டார்@ ஆனால் கடவுளின் வல்லமையால் உயிரோடிருக்கிறார். அவருடைய வலுவின்மையில் பங்குபெறும் நாங்களும், கடவுளின் வல்லமையால் அவரோடு ஒன்றித்து உயிரோடிருப்போம்@ அது நாங்கள் உங்களை நடத்தும் முறையில் விளங்கும்.
5 உங்கள் வாழ்க்கை விசுவாசத்தின்மேல் ஊன்றியுள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள்@ உள்ளங்களை ஆய்ந்தறியுங்கள். கிறிஸ்து இயேசு உங்கள் உள்ளத்தில் இருப்பதை அறிகிறீர்கள் அல்லவா? நீங்கள் தகுதியற்றவர்களாய் இராவிட்டால் அறிவீர்கள்.
6 நாங்கள் தகுதியற்றவர்கள் அல்ல என்று நீங்கள் அறிவீர்களென நம்புகிறேன்.
7 நீங்கள் தீமையொன்றும் செய்யாதிருக்கும்படி கடவுளைப் பார்த்து மன்றாடுகிறோம்@ எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை@ அதை எடுத்துக்காட்ட வாய்ப்பே இல்லாதவாறு நீங்கள் நல்லதைச் செய்ய வேண்டுமென்பது தான் எங்கள் நோக்கம்.
8 உண்மைக்கு முரணாய் எதையும் செய்ய எங்களால் இயலாது@ உண்மையில் பொருட்டே உழைக்க முடியும்.
9 நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்போது நாங்கள் எங்கள் வலிமையைக் காட்டத் தேவையிராது@ அது எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆகவே நீங்கள் ஞான நிறைவு அடைய வேண்டுமென்பதே எங்கள் மன்றாட்டின் கருத்து.
10 ஆகையால்தான் உங்களிடம் வருவதற்கு முன்பே இதையெல்லாம் எழுதுகிறேன். நான் உங்களிடம் வரும்போது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் மிகக் கடுமையாய் நடந்துகொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில், அழிவுக்காக அன்று, ஞான வளர்ச்சிக்காகவே இந்த அதிகாரத்தை ஆண்டவர் எனக்கு அளித்திருக்கிறார்.
11 இறுதியாக, சகோதரர்களே, மகிழ்ச்சியோடு இருங்கள்@ ஞான நிறைவடைய முயலுங்கள்@ என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்@ ஒன்றுபட்டு வாழுங்கள்@ சமாதானமாய் இருங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார்.
12 பரிசுத்த முத்தங் கொடுத்து, ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்@ இறை மக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
13 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்களனைவரோடும் இருப்பதாக!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம் - புதிய ஏற்பாடு, நீங்கள், ஏற்பாடு, உங்களிடம், நான், நாங்கள், எங்கள், எழுதிய, கடவுளின், கொரிந்தியருக்கு, இரண்டாவது, நிருபம், உங்கள், பரிசுத்த, எடுத்துக்காட்ட, செய்ய, இயேசு, உங்களோடு, ஆன்மிகம், திருவிவிலியம், எச்சரிக்கை, மறுபடியும், கிறிஸ்து, அல்லவா, வல்லமையால்