பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ந வேத யஜ்ஞாத்யயநைர்ந தாநை:
ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை:। ஏவம்ரூப: ஷக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர॥ 11.48 ॥ |
குரு குலத்து பெரு வீரனே ! இத்தகைய எனது விசுவ ரூபத்தை பூமியில் உன்னை தவிர வேறு யாரும் வேதங்களாலோ, யாகங்களாலோ, படிப்பாலோ, தானங்களாலோ, கிரியைகலாலோ தீவிர தவங்களாலோ காண இயலாது.
மா தே வ்யதா மா ச விமூடபாவோ
த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம்। வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபஷ்ய॥ 11.49 ॥ |
எனது கோரமான உருவத்தை பார்த்து உனக்கு பயமோ குழப்பமோ வேண்டும். பயம் நீங்கி மன மகிழ்ச்சியுடன் எனது பழைய உருவத்தை நன்றாக பார்.
ஸம்ஜய உவாச। |
இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா
ஸ்வகம் ரூபம் தர்ஷயாமாஸ பூய:। ஆஷ்வாஸயாமாஸ ச பீதமேநம் பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா॥ 11.50 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: கிருஷ்ணர் அர்ஜுனனிடம் இப்படி சொல்லி சொந்த உருவத்தை மீண்டும் காட்டினார். அவ்வாறு பரம்பொருளாகிய கிருஷ்ணர் மீண்டும் இனிய வடிவம் தாங்கி, பயந்த அர்ஜுனனை தேற்றினார்.
அர்ஜுன உவாச। |
த்ருஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந। இதாநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத:॥ 11.51 ॥ |
அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! உனது இந்த இனிய மனித வடிவை பார்த்து இப்போது நான் மனத்தெளிவு பெற்று இயல்பான நிலையை அடைந்து இருக்கிறேன்.
ஸ்ரீபகவாநுவாச। |
ஸுதுர்தர்ஷமிதம் ரூபம் த்ருஷ்ட்வாநஸி யந்மம। தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஷநகாங்க்ஷிண:॥ 11.52 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: எனது எந்த வடிவத்தை நீ கண்டிருக்கிறாயோ காண்பதற்கு அறியதான அதை எப்போதும் காண தேவர்களும் விரும்புகிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, ரூபம், எனது, பகவத்கீதை, விஷ்வரூபதர்ஷந, அத்தியாயம், உருவத்தை, பதினொன்றாவது, ஸ்ரீமத், யோகம், கிருஷ்ணர், இனிய, மீண்டும், கூறினார், இந்து, bhagavad, gita, பார்த்து, உவாச।