நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
யதைதாம்ஸி ஸமித்தோ அக்நிர்பஸ்மஸாத்குருதே அர்ஜுன। ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா॥ 4.37 ॥ |
அர்ஜுனா ! கொழுந்து விட்டு எரியும் நெருப்பு விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறதோ அப்படி ஞானமாகிய நெருப்பு எல்லா வினைபயன்களையும் சாம்பலாக்குகிறது.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஷம் பவித்ரமிஹ வித்யதே। தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி॥ 4.38 ॥ |
புனிதபடுத்துபவற்றுள் ஞானத்திற்கு இணையாக எதுவும் இல்லை. யோகி அந்த ஞானத்தை கால கிரமத்தில் தன்னுள் அடைகிறான்.
ஷ்ரத்தாவாம்ல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:। ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஷாந்திமசிரேணாதிகச்சதி॥ 4.39 ॥ |
சிரத்தை உடைய, ஞானத்திலேயே கண்ணும் கருத்துமான, புலன்களை வசப்படுத்திய ஒருவன் ஞானம் பெறுகிறான். அதன் காரணமாக வெகுவிரைவில் மேலான அமைதியை பெறுகிறான்.
அஜ்ஞஷ்சாஷ்ரத்ததாநஷ்ச ஸம்ஷயாத்மா விநஷ்யதி। நாயம் லோகோ அஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மந:॥ 4.40 ॥ |
அறிவற்ற, சிரத்தையில்லாத சந்தேகவாதி அழிகிறான். சந்தேகவாதிக்கு இந்த உலகமும் இல்லை. அந்த உலகமும் இல்லை, சுகமும் இல்லை.
யோகஸம்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸம்சிந்நஸம்ஷயம்। ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநம்ஜய॥ 4.41 ॥ |
அர்ஜுனா ! யோகத்தினால் செயல்களை விட்டு ஞானத்தினால் சந்தேகம் நீங்கபெற்று, ஆன்மாவில் நிலைபெற்று நிலத்திருப்பவனை செயல்கள் கட்டுவதில்லை.
தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:। சித்த்வைநம் ஸம்ஷயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத॥ 4.42 ॥ |
இதயத்தில் இருக்கின்ற ஆன்மாவை பற்றிய, அறியாமையிலிருந்து தோன்றிய இந்த சந்தேகத்தை ஞான வாளினால் வெட்டி யோகத்தை பயிற்சி செய். பரத குலத்தில் உதித்தவனே ! அதற்காக எழுந்திரு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பகவத்கீதை, இல்லை, யோகம், நான்காவது, ஸ்ரீமத், அத்தியாயம், சன்யாச, கர்ம, அந்த, ஜ்ஞாநம், பெறுகிறான், உலகமும், விட்டு, gita, இந்து, அர்ஜுனா, bhagavad, நெருப்பு