நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:। ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:॥ 4.19 ॥ |
யாருடைய செயல்கள் ஆசையும் சங்கல்பமும் அற்றதாகவும் ஞான தீயால் எரிக்கப்பட்டதாகவும் இருக்குமோ அவனை விவேகி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஷ்ரய:। கர்மண்யபிப்ரவ்ருத்தோ அபி நைவ கிம்சித்கரோதி ஸ:॥ 4.20 ॥ |
செயலின் பயனில் பற்றைவிட்டு நிலைத்த திருப்தி உடையவனாய், எதையும் சாராதவனாய் இருக்கின்ற ஒருவன் செயலில் ஈடுபட்டாலும், அவன் எதையும் செய்தவன் ஆக மாட்டான்.
நிராஷீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:। ஷாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 4.21 ॥ |
ஆசையற்ற, மனத்தையும் உடம்பையும் கட்டுபடுத்திய உடைமைகள் அனைத்தும் விட்ட ஒருவன் உடம்பால் மட்டும் செயல்கள் செய்தால் பாவத்தை அடைவதில்லை.
யத்ருச்சாலாபஸம்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:। ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே॥ 4.22 ॥ |
எதேச்சையாக கிடைத்ததில் மகிழ்பவன், இருமைகளை கடந்தவன், பொறாமை இல்லாதவன், வெற்றி தோல்விகளில் சமமாக இருப்பவன்-இத்தகையவன் செயலில் ஈடுபட்டாலும் அதனால் கட்டபடுவதில்லை.
கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:। யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே॥ 4.23 ॥ |
பற்றில்லாத, சுதந்திரமான, ஆண்மவுணர்வில் நிலைபெற்ற மனத்தை உடைய, செயல்களை வேள்வியாக செய்கின்ற ஒருவனின் எல்லா செயல்களும் கரைந்து விடுகிறது.
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்। ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா॥ 4.24 ॥ |
அர்ப்பணம் செய்வதற்கான கரண்டி பிரம்மம் . அர்ப்பணம் செய்யபடுகின்ற பொருள் பிரம்மம். பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கபடுகிறது. பிரம்மகர்ம சமாதி நிலையில் உள்ள அவனால் பிரம்மமே அடையபடுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, கர்ம, பகவத்கீதை, நான்காவது, யோகம், ஸ்ரீமத், சன்யாச, அத்தியாயம், ஈடுபட்டாலும், ப்ரஹ்ம, அர்ப்பணம், செயலில், பிரம்மம், எதையும், gita, இந்து, செயல்கள், bhagavad, ஒருவன்