ஜென் கதைகள் - அந்த இரண்டு வார்த்தைகள்!
ஒரு ஊரில் துறவி மடம் ஒன்று இருந்தது. அங்கு அமைதியையே பின்பற்ற வேண்டும். துறவிகள் யாரும் பேசவேக் கூடாது. ஆனால் அங்குள்ள துறவிகள் பத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பேசலாம். அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசலாம்.
அப்போது அங்கு பத்து வருடங்கள் தங்கிய பிறகு துறவி ஒருவர் குருவிடம் சென்றார். குரு "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "மெத்தை...கடினம்.." என்று தெரிவி்த்தார். அதற்கு குரு "அப்படியா!" என்று கேட்டார்.
மீண்டும் பத்து வருடம் கழித்து குருவிடம் சென்றார். "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று குரு மறுபடியும் கேட்டார். அதற்கு அந்த துறவி "உணவு...நாற்றம்..." என்று கூறினார். அதற்கு குரு "அப்படியா!" என்று மட்டும் கேட்டார்.
அந்த துறவி மறுபடியும் பத்து வருடத்திற்கு பிறகு குருவைப் பார்க்க போனார். குருவும் "இந்த பத்து வருடத்திற்கு நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "நான் செல்கிறேன்" என்று சொன்னார். அதற்கு அந்த குரு "எனக்கு ஏன் என்று தெரியும். ஏனெனில் உனக்கு எப்போதும் புகார் கூறுவதே வழக்கமாக இருந்தது" என்று சொன்னார்.
துறவியாக ஆசைப்படுபவர்களுக்கு எந்த ஒரு தேவையும் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் துறவியாக முடியாது என்பது தான் இந்த கதையின் கருத்து ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்த இரண்டு வார்த்தைகள்! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", பத்து, அதற்கு, துறவி, கேட்டார், குரு, அந்த, இரண்டு, என்ன, வருடம், வருடத்திற்கு, நினைக்கும், வார்த்தை