முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » மரியாதை இராமன் கதைகள் » இரும்பைத் தின்ற எலி வழக்கு
மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு
கண்ணுசாமி என்னும் பெயருடைடய ஒருவன் இரும்பு வியாபாரம் செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் புண்ணியத்தலங்சுளுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. கைவசம் உள்ள இரும்பை உடனடியாக விற்பணை செய்யவும் முடியலில்லை. எனவே தனது நண்பனான முத்து என்பவனிடம் சென்றான்.
முத்து, நான் என் சூடும்பத்தாகுருன் தல யாத்திரை போக நினனத்திருக்கிறேன். என்னிடம் பத்து பாரம் இரும்பு உள்ளது. அதை உன்னுடைய புறக்கடையில் போட்டு வைக்கிறேன். நான் திரும்பி வந்ததும் அதைப் பெற்றுக் கொள்கிறேன். இந்த உதவியைச் செய்வாயா?" என்று முத்துவிடம் கேட்டான் கண்ணுசாமி..
ஓ, அதற்கென்ன! தாராளமாக உன்னிடம் இருக்கும் இரும்பை என் வீட்டுக் கொல்லைப் புறத்தில் போட்டுவை. நான் என்ன அதற்குச் சோறும் தண்ணீருமா போடப் போகிறேன். நீ எப்போது வந்தாலும் திரும்ப எடுத்து- கொள்ளலாம்" என்றான் முத்து.
கண்ணுசாமியும் தன்னிடமிருந்த இரும்பு முழுவதையும் முத்துவின் வீட்டில் கொண்டு வந்து போட்டான். பின்னர் அவன் தலயாத்திரைக்குப் புற்ப்பட்டு விட்டான்.
கண்ணுசாமி ஊரை விட்டுப் போனதும் அவன் கொடுத்துச் சென்ற இரும்பை நல்ல விலைக்கு விற்று விட்டான் முத்து.
பல மாதங்கள் கழிந்தன. கண்ணுசாமி தலயாத்திரையை ழுடித்துக் கொண்டு திரும்பி வந்தான். தன் நண்பன் முத்துவிடம் சென்று, "நண்பா, நான் உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போன இரும்பை திரும்பக் கொடுக்கிறாயா?" என்று கேட்டான்.
"இரும்பா? அதை எலி தின்று விட்டதே! என்றான் முத்து"
விதண்டாவாதமாகப் பேசுகிறவனிடம் நியாயம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்த கண்ணுசாமி, நேராக மரியாதை இராமனிடம் சென்றான். முத்து தன்னை ஏமாற்றி விட்டதல்லாமல் விதண்டாவாதமாகப் பேசுவதையும் தெரிவித்தான்.
முழுக் கதையையும் கேட்ட மரியாதை இராமன், "நீ வரும்போது அவனிடம் கோபமாகப் பேசியோ சண்டைபோட்டு விட்டோ வந்தாயா7" என்று கேட்டான்.
"நான் அவனிடம் ஒன்றும் பேசவில்லை நேராக உங்கனிடம்தான் வருகிறேன்" என்றான் கண்ணுசாமி.
"நல்லவேலை செய்தாய் ழுள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். நான் இதற்கொரு யோசனை சொல்கிறேன், அதன்படி நட, மறுநாள் அவன் என்னிடம் வது நிற்பான். அப்போழுது பேசிக் கொள்வோம்" என்று கூறிய மரியாதை இராமன் கண்ணுசாமியின் காதில் இரகசியமாக ஏதோ சொல்லியனுப்பினான்.
மறுநாள் கண்ணுசாமி முத்துவின் வீட்டுக்குச் சென்றான். அவன், இரும்பு விஷயமாகதான் மீண்டும் தன் வீட்டுக்கு வந்திருக்கிறானோ என்று நினைத்தான் முத்து.
முத்து, இரும்பு விஷயமாக நான் இப்போது வரவில்லை அது பனழய இரும்புதான்; அதை இலேசில் விற்க ழுடியாது. விற்கப் போனாலும் வாங்குவதற்கு ஆள் கிடையாது. அது போனதே ஒரு விததில் நல்லதுதான், இல்லாவிட்டால் அதை வேறு சுமந்து கொண்டு என் வீட்டில் சேர்ப்பிக்க வேண்டும்" என்றான் கண்ணுசாமி.
முத்துவுக்குக் கண்ணுசாமியின் பேச்சு பரம திருப்தியாக இருந்தது.

முத்து நேற்று உன் மகன் பள்ளிக்கூடதில் இருந்து வரும்போது அவனை என் மனைவி பார்த்து விட்டாள். அவனைப் பார்த்ததும் தன் தம்பி மகன் ஜாடையாக இருப்பது அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு தன் தம்பி மகன் பேரில் கொள்ளை ஆசை, உன் மகனை தன்கூட இரண்டு நாட்கள் வைத்திருக்கப் பிரியப்படுகிறாள். அதற்காகதான் வந்தேன்" என்றான் கண்ணுசாமி.
இவ்வளவு பிரியமாகக் கூப்பிடும் போது என்னால் எப்படி மறுப்பு சொல்ல முடியும்? இரண்டு நாட்கள் வைத்திருந்து பின்னர் என் மகனைக் கொண்டு வந்து விட்டு விடுங்கள்" என்று முத்து தன் மகனைக் கூப்பிட்டுக் கண்ணுசாமியுடன் அனுப்பினான்.
இரண்டு நாட்கள் ஆயிற்று. கண்ணுசாமி முத்துவின் மகனைக் கொண்டு வந்து ஒப்படைக்க வில்லை. மூன்று நாட்கள் ஆகியும் கண்ணுசாமி முத்துவின் வீட்டுப் பக்கமே திரும்பவில்¬ல்.
சுந்தேகம் ªசு£ண்ட முத்து, கண்ணுசாமியின் விட்டுக்குப்போய் "எங்கே, என் மகன்?" என்று கேட்டான்.
"நான் என்னவென்று சொல்லுவேன்? உன் வீட்டுக்குக் கூட்டி வரும்போது வழியில் ஒரு பெரிய பருந்து வந்து உன் மகனை தூக்கிக் கொண்டு போய் விட்டது" என்றான் கண்ணுசாமி.
குழந்தையையாவது, பருந்தாவது தூக்கிச் செல்வதாவது? என்ன உளறுகிறாய்? உன்னைச் சும்மா விட்டேனா பார்!' என்று ஆவேசமாகக் கத்தி விட்டு நேரே மரியாதை இராமனிடம் சென்று வழக்கைக் கூறினான்.
ஆப்படியா! நான் கண்ணுசாமியை வரவழைத்து நியாயம் கேட்கிறேன்" என்று கூறிய மரியாதை இராமன் கண்ணுசாமியை அழைத்து வர ஆள் அனுப்பினான்.

"ஏன் நடக்காது? இரும்பை எலி தின்னும் போது, குழந்தைதயைப் பருந்து ஏன் தூக்கிச் செல்லக் கூடாது?" என்றான் கண்ணுசாமி.
"எனக்கும் ஒன்றும் புசியவில்லையே? இரும்பையாவது எலி தின்னுவதாவது" என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான் மரியாதை இராமன்.
அய்யா, என்னை மன்னிது விடுங்கள். நான் தான் இவரை ஏமாற்ற நினைத்து அந்த மாதிரிப் பொய் சொன்னேன். இவருடைய இரும்பு விற்ற பணத்தை திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் மகனை திரும்பக் கொடுத்து விடச் சொல்லுங்கள்" என்றான் முத்து.
அப்படி வா, வழிக்கு?" என்று கூறிய மரியாதை இராமன் இரும்பு விற்ற பணதுடன் ஐம்பது பணம் சேர்த்துக் கண்ணுசாமிக்கு வாங்கிக் கொடுத்து அவனிடமிருத முத்துவின் மகனை முத்துவிடம் ஒப்படைதான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரும்பைத் தின்ற எலி வழக்கு - மரியாதை இராமன் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - ", கண்ணுசாமி, முத்து, நான், என்றான், மரியாதை, கொண்டு, இரும்பு, கேட்டான், இராமன், முத்துவின், இரும்பை, மகனை, நாட்கள், மகன், அவன், வந்து, சென்றான், மகனைக், பருந்து, கொடுத்து, இரண்டு, முத்துவிடம், ஒன்றும், கூறிய, கண்ணுசாமியின், திரும்பக், வரும்போது