முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » மரியாதை இராமன் கதைகள் » காதுக் கட்டுக்கனைத் திருடியவன்
மரியாதை இராமன் கதைகள் - காதுக் கட்டுக்கனைத் திருடியவன்
மணிவண்ணன் என்பவர் ஒரு வியாபாரி தொழிலில் நல்ல இலாபம் வந்தபடியால் வைரக் கடுக்கன்கள் செய்து இரண்டு காதுகளிலும் போட்டுக் கொண்டார்.
ஒகு நாள் வியாபார நிமித்தமாக அவர் வெளியூர் செல்ல வேண்டி நேரிட்டது. இர்வு வெகு நேரமாகி விட்டதால் அங்குள்ள சத்திரத்தின் திண்ணையில் படுத்துக் கொண்டார். அவ்வாறு படுக்கும்போது அவர் ஒருக்களித்தவாறு படுத்திருந்தார். அவருடைய இடது காது தனரயிலும், வலது காது மேற்புறமாகவும் இருத்தது.
மணிவண்ணனுக்கு எதிரே ஒரு வழிப் போக்கன் படுத்திருந்தான். அவன் மணிவண்ணனின் வலது காதில் மின்னும் வைரக் கடுக்கனைப் பார்த்து விட்டான். அவன் மிகவும் பொல்லாதவன்.
மணிவண்ணன் நன்றாக தூங்கியதும் அவருக்கு எதிரே படுத்துக் கொண்டிருந்தவன் மெல்ல எழுத்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.
எல்வோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருத்தடைக் கண்டதும் மெதுவாக மணிவண்ணனின் வலது காதிலிருந்த கடுக்கனைக் கழற்றித் தனது இடது காதில் போட்டுக்கொண்டு ழுன் போலவே அவர் எதிரில் படுத்துக் கொண்டான்.
காலையில் விழித்து எழுந்த மணிவண்ணன் தனது வலது காதில் கடுக்கன் இல்லாததைக் கண்டார்.
எதிரே படுத்திருந்தவனது இடது காதில் தன்னுடைய வைரக் கடுக்கன் இருந்ததைக் கண்டார்.
திருட்டுப் பயலே, என்னுனடய கடுக்கனைத் திருடிக் கொண்டு என் எதிரிலேயே படுத்திருக்கிறாயே?" என்றார் மணிவண்ணன். '
திருடனோ, "யாரைப் பார்த்துத் திருடன் என்கிறாய். நீதான் என் காதில் இருந்த ஒரு கடுக்கனைத் திருடி உன் காதில் போட்க் கொண்டிகிறாய். நீதான் திருடன். வா, மரியாதை இராமனிடம் செல்வோம்" என்று கூறிய்வாறு மணிவண்ணனை அழைத்துக்கொண்டு மரியாதை இராமனிடம் சென்றான்.
மணிவண்ணனுக்கோ தன் காதுக் கடுக்களில் ஒன்று போனதுமல்லாமல் தன்னனயே திருடனாக்கி விட்டானே என்று வருத்தம் ஏற்பட்டது.
இவர்களுடைய வழக்னகக் கேட்ட மரியாதை இராமன், நீங்கள் இத்த மாதிரி ஒருவரையருவர் திருடன் என்று கூறுவதில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் இருவரும் சத்திரத்தில் எவ்வாறு படுத்திர்களோ அதைப் போல இங்கு படுத்துக் காட்டுங்கள்" என்றான்.
இருவரும் எதிரும் புதிருமாக ஒருக்களித்துப் படுத்திருத்தனர்.
அப்பொழுது மனிவண்ணன் இடது காது தரையில் இருந்தது. திருடனது இடது காது மேலே இருந்தது. அந்தக் காதில் கடுக்கன் இருத்ததையும். மேல் புறமாக இருந்த மணிவண்ணனின் வலது காது காலியாக இருத்ததையும் மரியாதை இராமன் கண்டான்.
'மணிவண்ணனின் மேல் புறமாக உள்ள வலது காது காலியாக இருந்தது. திருடுவதானால் அந்தக் காதில் இருத்துதான் ஒருவன் திருடியிருக்க வேண்டும். எதிரே படுத்திருத்தவனது காலியான இடது காது தரையில் படிந்துள்ளது, இதில் இருந்து ஒருவரும் கடுக்கனைத் திருடியிரூக்க முடியாது. எனவே மணிவண்ணனின் கடுக்கனைத் திருடியவன் இவனே! என்று திருடனைப் பார்த்துக் கூறிய மரியாதை இராமன் அவனிடமிருந்து கடுக்கனை வாங்கி மணிவண்ணனுக்கு கொடுத்துத் திருடனுக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனையும் கொடுத்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதுக் கட்டுக்கனைத் திருடியவன் - மரியாதை இராமன் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - காதில், காது, வலது, இடது, மணிவண்ணனின், மரியாதை, கடுக்கனைத், எதிரே, மணிவண்ணன், படுத்துக், வைரக், இராமன், அவர், கடுக்கன், திருடன்