முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 85
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 85
புலவர்களின் பாட்டுகளில் இடம் இல்லை. தமிழ்கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் பாயிரத்தில் குறிப்பிடப்படுகிறது. புறநானூற்றுப் பாட்டுகளிலும் பதிற்றுப்பத்துப் பாட்டுகளிலும் அப்படிப்பட்ட சிறந்த குறிப்பு இல்லை. மாறாக, மூன்று அரசர்களுக்குள்ளும் இருந்த பகையும் போர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் கூடிப் பழகும் காட்சியும் அரிய காட்சியாகவே உள்ளது. சிலப்பதிகார ஆசிரியரே முதல்முதலாகத் தமிழ்மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று, தமிழ்நாட்டின் பல பகுதிகளையும் ஒரு நூலில் பாராட்டியுள்ளார். அவர் இயற்றிய காப்பியமும் அதற்கு ஏற்றதாக அமைந்தது. காப்பியத் தலைவி கண்ணகியின் பிறப்பிடம் சோழநாடு; அவள் புகுந்து துன்புற்றது பாண்டிய நாடு; அவள் முடிவில் சேர்ந்ததும் அவள் புகழ் பரவக் காரணமாக இருந்ததும் சேர நாடு. ஆகவே காப்பியப் புலவர் மூன்று நாடுகளையும் பாராட்டவும் மூன்று அரசர்களைப் புகழவும் இடந் தந்தது காப்பியத்தின் கதை நிகழ்ச்சி.
சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பெரிய வணிகர் குடும்பத்தில் பிறந்தவன் கோவலன். மற்றொரு வணிகர் குடும்பத்தைச் சார்ந்தவள் கண்ணகி. இரண்டும் செல்வக் குடும்பங்கள். இருவர்க்கும் திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் அவர்களின் இல்வாழ்ககை நன்றாக நடந்தது. அந்த நகரத்தில் ஒரு பரத்தையர் குடும்பத்தில் இசைநாட்டியக் கலைகளைக் கற்றுத்தேர்ந்த மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இளமையழகும் கலைகளின் கவர்ச்சியும் நிரம்பிய அவள்மீது கோவலன் காதல் கொண்டான். கண்ணகியை மறந்து, தன் தொழிலையும் மறந்து கோவலன் அவளுடன் வாழத் தொடங்கினான். அவளும் அன்பான வாழ்க்கை நடத்தினாள். மெல்ல மெல்ல அவனுடைய செல்வம் தொலைந்தது. உள்ளத்தினுள்ளே நாணமும் கொண்டு வருந்தினான். ஒரு நாள் ஒரு திருவிழாவின்போது கடற்கரையில் இருவரும் யாழ் எடுத்து மாறி மாறிப் பாட, அந்தப் பாடல்களில் மாதவி புலப்படுத்திய காதல் குறிப்பைத் தவறாக உணர்ந்த கோவலன் உடனே அவளை விட்டு நீங்கினான். திரும்பிவந்த கணவனைக் கண்ணகி வழக்கம்போல் அன்பு குன்றாமல் வரவேற்றாள். அவனுடைய கவலையை உணர்ந்தாள். தன் காலின் பொற்சிலம்பைத் தந்தாள். இருவரும் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரைக்குச் சென்றார்கள். அங்கே பொன்சிலம்பை விற்கச் சென்ற கோவலன் அதை ஒரு பொற்கொல்லனிடம் காட்டினான். அவன் உடனே அரசனிடம் சென்று, ‘அரண்மனைச் சிலம்பைத் திருடியவன் இவனே’ என்று சொல்லி அரசனுடைய ஆட்களைக்கொண்டு அவனைக் கொல்லுமாறு செய்தான். தீர ஆய்ந்து கூறாமல் அவசரப்பட்டு ஆணை பிறப்பித்த பாண்டிய அரசனிடம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 85 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - கோவலன், பாண்டிய, அவள், மூன்று