முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 224
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 224
பிற நூல்கள்
பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களுள் சிறப்புப்பெற்று விளங்குவது திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ். அது பகழிக்கூத்தரால் பக்திச்சுவையும் இலக்கிய நயமும் அமையப் பாடப்பட்டது.
கடவுள்மாமுனிவர் என்பவர் திருவாதவூர்ப் புராணம் என்னும் தலபுராணம் பாடினார். அது தலபுராணமே ஆயினும், மாணிக்கவாசகரின் வரலாறு கூறுவதால் பெருமை பெறுகிறது.
மதுரகவிராயர் என்னும் புலவர் சென்ற நூற்றாண்டில் திருக்கச்சூர் நந்தி என்னும் நாடகத்தைச் செய்யுளில் இயற்றினார். அவர் இயற்றிய தனிப்பாடல்கள் பல, இலக்கியச் சுவை உடையவை.
தஞ்சாவூரில் அரசராக இருந்த சரபோஜி என்னும் மராட்டிய மன்னரின் அவைக்களப் புலவராக விளங்கியவர் ஒப்பிலாமணிப்புலவர். நாலாயிரம் செய்யுள்கொண்ட சிவரகசியம் என்னும் நூலை அவர் இயற்றினார்.
சரபோஜி மன்னரின் கோயில் பூசாரியாக இருந்தவர் அபிராம பட்டர். அவர் பாடிய அபிராமி அந்தாதி சக்தி வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்களுக்கு மிக உயர்ந்த வழிபாட்டு நூலாக உள்ளது. பாடல்கள் உருக்கமான பக்திச்சுவை உள்ளவை; நடை மிக நேர்மையான போக்கில் அழகும் தௌ¤வும் கூடியதாக உள்ளது.
அரபத்த நாவலர் பரத நாட்டியத்தின் இலக்கணத்தைச் செய்யுள் வடிவில் எழுதியவர். அழகர் கலம்பகம் என்பது அவர் படைத்த இலக்கியம். அது கலம்பகம் என்னும் நூலுக்கு உரிய உறுப்புகள் எல்லாம்பெற்று, கற்பனை நயத்துடன் அமைந்துள்ளது.
சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சாவூரில் ஆட்சிபுரிந்த மராட்டிய அரசர் சரபோஜியின் அரசவைப் புலவராக இருந்தவர். இரண்டு தலபுராணங்களும், மூன்று உலா நூல்களும், ஒரு கோவையும், ஒரு குறவஞ்சி நாடகமும் இயற்றினார். பாட்டுகள் எல்லாம் பழைய இலக்கியப் பாங்கில் அமைந்தவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 222 | 223 | 224 | 225 | 226 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 224 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - என்னும், அவர், இயற்றினார்