ஈசாப் நீதிக் கதைகள் - கோழியும் பெண்ணும்
ஒரு பெண் கோழி ஒன்றை வளர்த்து வந்தாள். அந்தக் கோழி தினமும் முட்டை ஒன்றை இட்டது.
அந்தக் கோழி நல்ல இனம் என்பதால், அதன் முட்டைகள் நன்றாக இருந்தன. நல்ல விலைக்கும் விற்றன.
திடீரென அந்தப் பெண்ணுக்கு ஒரு யோசனை தோன்றியது. தினம் அந்தக் கோழிக்குப் போடும் தீனியைப் போல இரண்டு மடங்கு தீனியைப் போட்டால், ஒரு முட்டைக்குப் பதிலாக இரண்டு முட்டை இடும்; நமக்கும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்று நினைத்தாள்.
அடுத்த நாளிலிருந்து கோழிக்கு இரண்டு மடங்கு தீனி போடப்பட்டது. சில நாட்களில் கோழி பெருத்துவிட்டது. நடக்கக்கூட முடியவில்லை. முட்டை போடுவதையும் நிறுத்திவிட்டது.
நீதி: உருவத்தை வைத்து எடைபோடக்கூடாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோழியும் பெண்ணும் - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - கோழி, இரண்டு, அந்தக், முட்டை