ஈசாப் நீதிக் கதைகள் - நாயும் சிப்பியும்
ஒரு ஊரில் நாய் ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் முட்டைகளை சாப்பிட்டே பழக்கம்.
ஒரு நாள் அது முட்டை வடிவில் இருந்த ஒரு சிப்பியைப் பார்த்தது. உடனே முட்டை என்று நினைத்து அப்படியே கவ்வி, விழுங்கிவிட்டது.
ஆனால், விழுங்கியது சிப்பி என்பதால், நாயின் வயிறு கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.
"எனக்கு இது தேவைதான். முட்டை வடிவில் இருப்பதெல்லாம் முட்டை என்று நினைத்த என் முட்டாள்தனத்திற்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை" என்று புலம்பியது அந்த நாய்.
நீதி: முன்யோசனையின்றி ஒரு செயலில் ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாயும் சிப்பியும் - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - முட்டை