26. உத்திரட்டாதி - நட்சத்திர ஆருடம்
26. உத்திரட்டாதி வந்ததால்..
பலிக்குமுத்தி ரட்டாதி உதயமானால் பலமான தொழில் பெரும் சுகமுமோங்கும் களந்திடவே குருபார்வை யாதலாலே கவலையுடன் கஷ்டமும் கலகமும் நீங்கும் துளிர்த்திடவே மணங்கூடும் மகப்பேறாகும் துலைதூர செய்தி வரும் பிணியும் போகும் அளித்திடுவான் கருணையது கந்தநாதன் ஆழிசூழ் உலகினிலே வாழி வாழி! |
பொருள்: உத்திரட்டாதி ஆரூடமாக வந்ததால், ஆழிசூழ் உலகில் ஆறுமுகனின் கருணையால் ஆனந்தம் பெருக வாழ்வீர்கள். பலமான தொழில் பெருகும். குடும்ப சுகம் ஏற்படும். தவிர, குரு ஐந்தாமிடத்தின் பார்வையாதலால் அலைச்சலும், கவலையும், கஷ்டமும், குடும்பத்தில் கலகமும் நீங்கும். மனையில் கல்யாண காரியங்களும் புத்திர சம்பத்தும் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நோயும் கண்டமும் நீங்கும். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
26. உத்திரட்டாதி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்