25. பூரட்டாதி - நட்சத்திர ஆருடம்
25. பூரட்டாதி வந்ததால்..
தழைக்கவே பூரட்டாதி உதயமானால் தப்பாதுன் வாக்குதான் செல்வமோங்கும் இழைக்கவே உனக்கிடர் விளைத்த பேர்கள் இழிவான நோய் நொடியில் மாள்வாரப்பா குழைக்கவே பொன் பொருளும் குவிய வாழ்வாய் கொண்ட தொரு பெண்ணாலே குலந்தழைக்கும் பிழைக்கவே நீடுழிகாலம் வாழ்வாய் பதினேழு நாள் போக பலிதமாமே! |
பொருள்: பூரட்டாதி உதயமானதால், உங்கள் புகழானது ஓங்கும். நாணயம் தவறாத சொல்லுறுதி உண்டாகும். செல்வம் ஓங்கும். உங்களுக்கு இதுவரையிலும் இடைஞ்சல் புரிந்த ஈனர்கள் ஒழிவார்கள். தன-தான்யக் குவியலும், பொன் பூஷண சேர்க்கையும் உண்டாகும். கொண்ட குணவதியினால் குடும்பம் தழைத்தோங்கும். கெடுதலான கண்டங்களும் நீங்கி, ஆயுள் பலத்தைக் கொடுக்கும். எண்ணங்கள் பலவிதமாகும். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
25. பூரட்டாதி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்