20. பூராடம் - நட்சத்திர ஆருடம்
20. பூராடம் வந்ததால்..
தெரியவே பூராட முதயமாச்சு தீதற்ற உன் மனதில் தயக்கமாச்சு அரிய பெரியோர்களின் நேசம் போச்சு சையெல்லாம் நிராசையாய் மாறலாச்சு பெரியோர்கள் தேடி வைத்த பொருளும் போச்சு பெண்மணியால் குடும்பத்தில் கலகமாச்சு சரியற்ற குற்றம் பல உனக்குண்டாச்சு சஞ்சலமே நீங்குமப்பா வருடமொன்றில் |
பொருள்: பூராடத்தின் பலன் என்னவென்றால், தைரியமும் அரிய பெரியோர்களுடைய அன்பும் நீங்கும். பிரிவும், துன்பமும் நேரும். தெளிவுள்ள உன் மனத்தில் தயக்கம் உண்டாகும். மூத்தோர்கள் தேடி வைத்த மூலதனம் அழியும். உனது ஆசையெல்லாம் நிராசையாகும். ஒரு கன்னிகையால் குடும்பம் களங்கப்படும். மனம் துணியாத குற்றமெல்லாம் செய்ய நேரிடும். ஒரு வருடம் வரை, கொஞ்சம் சஞ்சலமாகவே இருக்கும். இது மத்திமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
20. பூராடம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்