19. மூலம் - நட்சத்திர ஆருடம்
19. மூலம் வந்ததால்..
சுகமுண்டு மூலமது உதித்ததாலே சூதுடையோர் உறவதனை விட்டுப் போகும் அகமகிழ ஆண்டவனை நம்பி வாழ அதனாலேயே வனுகூல மடைவாய் பாரு ஜெகமாளும் மன்னனைப் போல் வாழ்வாயப்பா சேய் பிறக்கும் கடன் தீரும் தெற்கே லாபம் திகழும் தொழில் நிலபுலமும் மேன்மையாகும் சேதி வரும் நன்மையுண்டு தெரிகுவாயே. |
பொருள்: மூலம் ஆருடம் ஆனதால், மனத்தில் எண்ணிய காரியம் பலிதமாகும். ஆனால், வஞ்சகர்களுடன் உறவு வைத்து நெஞ்சம் கலங்கும் நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது. இன்னும் கொஞ்சம் நாட்களில் ஆண்டவன் சகாயத்தினால், வேண்டிய செல்வாக்குடனே வாழ்வாய். மனையில் ஒரு பெண் குழந்தை பிறக்கும். குடும்பக் கடன் தீரும். தெற்கு திசையிலே லாபம் உண்டாகும். தொழில் ஓங்கும். நிலபுலமும், நீடித்த செல்வமும், நிந்தையற்ற சிந்தனையும் உண்டாகும். வெளியிலிருந்து சந்தோஷகரமான செய்தியையும் கேட்பாய். இது உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
19. மூலம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்