16. விசாகம் - நட்சத்திர ஆருடம்
16. விசாகம் வந்ததால்..
காணவே விசாகமது உதயமானால் கவலையே குடிகொண்ட மனமதாகும் வேணவே மனக்கவலை அதிகரிக்கும் வேதனையும் வாதனையும் முன்னே நிற்கும் பூணவே பொன் பொருளு மழிந்து போகும் பொல்லாத கலகத்தால் பெயர் கெடுக்கும் தோணவே கவலையினால் நோய்தான் காணும் தீதேழு வாரம் வரை தெரிகுவாயே. |
பொருள்: நீ கொண்ட எண்ணம் அபலமாகும். மனத்தில் கவலை குடிகொண்டு, பைத்தியம் பிடித்தவனாகத் திரியச்செய்யும். நாளுக்கு நாள் மனக் கவலை அதிகரிக்கும். பேய்- பிசாசுகளின் தொல்லைகள் ஏற்படும். நோயின் வாதனையும், மனவேதனையும் உண்டாகும். பொன்- பூஷணங்கள் அழியும். பலபேரின் கலகத்தால் உனக்கு துஷ்டன் என்ற கெட்ட பெயர் உண்டாகும். 7-வது வாரத்தில் இடர்கள் நீங்கி, சுகம் உண்டாகும். மத்திம பலனே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
16. விசாகம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்