15. சுவாதி - நட்சத்திர ஆருடம்
15. சுவாதி வந்ததால்..
தானாகும் சுவாதியுமே உதயமானால் தரித்திரத்தால் பல நாளும் தயங்கச் செய்யும் வீணாகும் ஒருவருக்கு செய்த நன்றி விகர்ப்பமே நினைப்பார்கள் உன்னைக் கண்டால் காணாமல் பரதேசம் போகச் செய்யும் கடன்காரர் தொல்லையுனக் கதிகரிக்கும் கோணாத மனைவியும் பிரிந்து போவாள் கொடுமையது மாதம் மூன்றில் விலகும்காணே. |
பொருள்: சுவாதி உதயமாகி இருப்பதால், சோம்பல் மிகுதியாகும். தரித்திர திசையால், உதவி செய்தாலும் உபத்திரவமே உண்டாகும். குடும்பத்தில் பகை ஏற்பட்டு, கண்காணாமல் போகவும் நேரிடும். கடன்காரர்களின் தொல்லையும் உண்டு. மனைவியும் உன்னை விட்டுப் பிரிந்து போக நினைப்பாள். பலவிதமான கவலைகள் மனத்தில் குடிகொள்ளும். 3 மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கொடுமைகள் விலகும். ஆக, இந்த நட்சத்திரக்கட்டம் சொல்வது மத்திம பலனே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
15. சுவாதி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்