14. சித்திரை - நட்சத்திர ஆருடம்
14. சித்திரை வந்ததால்..
துன்பத்தின் மேல் துன்பமதிகரிக்கும் தொகுத்தோர் சித்திரையு முதயமானால் அன்புடைய அரசர்களின் பகையுண்டாகும் ஆதரித்த பேர்களுனை அவமதிப்பார் கன்றுடனே மாடுமனை நஷ்டமாகும் கடன் கொடுத்து கேட்டாலே கபடம் நேரும் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய்தால் ஒழியுமப்பா நாளுக்கு நாள் பீடைதானே |
பொருள்: துன்பத்துக்கு மேல் துன்பம் அதிகரிக்கும். அரசாங்க விரோதம் உண்டாகும். நீ ஆதரித்து வளர்ந்த நபர்களும் உன்னை அவமதிப்பார்கள். மாடு- கன்று நஷ்டம் ஏற்படும். மனை கொள்வதற்கு விருத்தி இராது. கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால், உன்னைக் கெடுக்கவே நினைப்பார்கள். ஆனால், இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு, நவகோண கர்த்தர்களாகிய நவகிரகங்களைப் பூசிக்க, நன்மை உண்டாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
14. சித்திரை - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்