7. புனர்பூசம் - நட்சத்திர ஆருடம்
7. புனர்பூசம் வந்ததால்..
அப்பனே புனர்பூசம் உதித்தாலே ஆபத்தும் கொடியபிணி கெண்டம் நீங்கும் தப்பி தங்களணுகாது மனைத்தழைக்கும் தனலாபம் மாடுமலை கொள்ளலாகும் செப்பவே சேனநாள் வழக்கு நீரும் சேய்பிறக்கும் கடன் தீரும் தொழிலுமோங்கும் ஒப்பிலா பெரியோர்களுதவியாலே உறுதியுண்டு சிலநாளை கழித்திடாயே. |
பொருள்: புனர்பூசம் ஆருடமானதால் படுமோசமான ஆபத்துகளும், பொல்லாத கண்டங்களும், பாதிக்கும் நோயும் நீங்கும். குறைவின்றி உனது குடும்பம் தழைக்கும். மாடு- மனை வகையில் லாபம் உண்டாம். வழக்குகளில் வெற்றி, புத்திர சம்பத்து, தொழில் விருத்தி உண்டு. அந்நியரான பெரியவர் ஒருவரின் உதவியால் ஆறுதலும் அமோக ஒத்துழைப்பும் உண்டாகும். ஆனால், ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்துவர, கஷ்டங்கள் விலகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
7. புனர்பூசம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்