5. மிருகசீர்ஷம் - நட்சத்திர ஆருடம்
5. மிருகசீர்ஷம் வந்ததால்..
துதித்து நீ நவக்கிரக பூஜை செய்தால் தொலையும் துயர் மிருகசீ ரிடமேயானால் மதித்திடவே மன்னவன்போல் மகிழ்ந்து வாழ்வாய் மனங்கூடும் மகப்பேரும் செல்வாக்குண்டு சதிபுரியும் நீங்கும் தொழிலுமோங்கும் தெற்கெனும் திசையிலிருந்து செய்திதோன்றும் பதினேழு நாள்போக நன்மையுண்டு பாலகனே குருமுனிசொல் நம்புவாயே. |
பொருள்: உனக்கு கிரகங்கள் எல்லாம் உச்சம் பெற்றிருப்பதால், உன் பூர்வ வினைகளும், வெகு நாட்களாக அனுபவித்த கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனியாக விலகும். குபேர சம்பத்துடன் புகழ்மிக்க வாழ்ந்திருப்பாய். மனையில் விவாகம் கைகூடும். கொடுமையான நோயாயினும் படிப்படியாக விலகும். தொழில் நீடித்தோங்கும். தெற்கு திசையிலிருந்து நன்மையான செய்தி வரும், 17-நாட்களில் மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி கிட்டும். நினைத்தது பலிதமாகும். புத்திர சம்பத்து உண்டாகும். உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
5. மிருகசீர்ஷம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்