4. ரோகிணி - நட்சத்திர ஆருடம்
4. ரோகிணி வந்ததால்..
தானாரும் ரோகிணி உதயமானால் தழைத்திடவே பஞ்சமத்தில் குருவமர்ந்தார் வீணாக வந்த இன்பம் விலகி நிற்கும் வெகுநாளாய் பகையானோ ருறவேயாவார் காணாமல் போன பொருள் வந்து சேரும் கவலைதரும் நோய்விலகும் மகப்பேராகும் கோணாமல் மனைவிமக்களுடனே வாழ்வாய் குறைதீரும் நவக்கிரகத்தை துதித்திடாயே. |
பொருள்: குரு பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்திருப் பதால், பலவிதத்திலும் நன்மை உண்டாகும். மலைபோல் வந்த துன்பங்களும் பனிபோல் விலகும். பகையாளிகளும் உறவாகச் சேருவார்கள். தொழில் விருத்தியாகும். காணாமற்போன பொருளாயினும் ஜீவனாயினும் கருத்துடன் வந்து சேரும். புத்திர பாக்கியம் உண்டு. பந்துக்களுடனும், மனைவி- மக்களுடனும் செல்வாக்குடன் வாழ்வீர்கள். கவலையும் நோயும் கஷ்டமும் இன்னும் இரண்டு வாரங்களில் நீங்கும். நாடிய எண்ணம் நல்லவிதமாக முடியும்; உத்தமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
4. ரோகிணி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்