ஆரூடப் பாடல் - 3, 3, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
குண்டாலும் அஞ்சுவார்கள் கருத்துடன் முன்மூன்றானால் விண்டாலும் சபைநடுங்க வேணவே தனமும் சேரும் செண்டாலும் சிறுவராலே சீமான்போல் வாழ்வுண்டாகும் கொண்டாடும் குலதெய்வங்கள் குதிகொள்ளும் உந்தனுக்கே. |
மூன்று முறை மூன்று வீழ்ந்தால் இனி உனக்கு நல்ல காலம் என்பதாகிறது. பெரிய சபைகளில் உனக்கு மரியாதை உண்டாகும். எதிரிகள் அஞ்சி நடுங்குவர். உன் வாரிசுகளினால் செல்வம் குவியும். செல்வ சீமானாய் வாழ்க்கை அமையும் குலதெய்வங்கள் உனக்கு துனையாக இருக்கும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 3, 3. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்