நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 4
அதாவது ஆடி மாதம் 12-ம் தேதி சுக்கிரனானவர் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்குப் பெயர்கிறார். 13-ம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கும் 28-ம் தேதி புதன் திரும்பவும் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்கிறார். இவைகள் தான் இந்த மாதத்தில் பெயர்ச்சிகள். இந்தப் பெயர்ச்சிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆடி 30-க்கு ஜாதகம் கணிக்கலாம், வாருங்கள்.
முதலில் ஜாதகக் கட்டத்தைப் போடுங்கள். 12-கட்டங்களையும் போட்டு விட்டீர்கள் அல்லவா? சுக்கிரனை மிதுனத்தில் போடுங்கள். புதனை சிம்மத்தில் போடுங்கள். மற்ற கிரகங்களை பஞ்சாங்கத்தில் கொடுத்துள்ள படி போடுங்கள்.ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.
எல்லாக் கிரகங்களையும் போட்டு விட்டீர்களா? ஒன்பது கிரகங்கள் இருக்கின்றனவா? இல்லையே! எட்டு கிரகங்கள் தானே இருக்கின்றன. சந்திரனைக் காணோம். நாம்
சந்திரனைப் போடவில்லை. அதை எப்படிப் போடுவது என்று நாம் பிறகு சொல்லிக் கொடுக்கிறோம். அதற்குமுன் வாக்கியரீதியாக ஆடி -30-க்கு ஜாதகம் கணிக்கலாம். வாருங்கள்.பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஆடி மாதத்திற்கு ஜாதகக் கட்டம் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள். 5-ம்தேதி புதன் கடகத்திற்கு வந்துவிட்டு 22-ம் தேதி சிம்மத்திற்குப் பிரவேசம் செய்கிறார். 11-ம் தேதி சுக்கிரன் மிதுனத்திற்கு வருகிறார். செவ்வாய் 22-ம் தேதியே தனுசிற்குப் பெயர்ந்து விட்டார். மேற்கண்ட பெயர்ச்சிகளைக் கணக்கில் கொண்டு நாம் ஜாதகம் கணித்தால் ஜாதகம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.
இப்போது திருகணிதரீதியாகவும், வாக்கியரீதியாகவும் ஜாதகம் கணிக்கக் கற்றுக்கொண்டீர்கள். ஜாதகம் ஒரே மாதிரியாக இருக்கிறதா ? இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தில் செவ்வாய் தனுசில் இருக்கிறார், திருகணிதத்தில் விருச்சிகத்தில் இருக்கிறார். இதுதான் இப்போதைய வித்தியாசம். மற்ற வித்தியாசங்கள் முழுவதும் போட்ட பின்புதான் தெரியும்.
அடுத்த பாடத்தில் சந்திரனை எப்படிப் போடுவது, ஜனன கால இருப்பு திசை எப்படிக்கண்டு பிடிப்பது போன்ற விஷயங்களைப் பார்ப்போம்.
மறுபடியும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 4 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்