நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 41
இவருக்கு செவ்வாய் தசை ஆரம்பமாகியது. எல்லோரும் கூறியது போல் செவ்வாய் பல கஷ்டங்களைக் கொடுக்கும் என எதிர்பார்த் தார். என்ன நடந்தது எனப் பார்ப்போம்?முதலில் ஒரு பதவி உயர்வு பெற்றார். அலுவலகத்தில் அவர் செய்த வேலைக்கு முக்கியத்துவம் கிடைத்தது. மிகத் திறமைமையானவர் என அலுவலகத்தில் மதிக்கப்பட்டு முக்கியமான பொறுப்புக்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. வீடு ஒன்று கட்டி முடித்தார். இவ்வாறு பல நல்ல காரியங்கள் அந்த செவ்வாய் தசையில் நடந்தது.
இதற்குக் காரணம் என்ன? 3, 8-க் குடையவர் கஷ்டத்தைக் கொடுப்பதற்கு பதில் பல நன்மைகளைச் செய்யக் காரணம் என்ன?
சரி! முதலில் ஒரு கிரகம் எப்படிப் பலன் அளிக்கிறது எனப் பார்ப்போம். ஒருகிரகம் எந்த நட்சத்திரச் சாரத்தில் இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். அதை எப்படிப் பார்ப்பது? மேற் கூறிய ஜாதகத்தில் செவ்வாய் ரிஷபத்தில் இருக்கிறார். ரிஷபத்தில் என்னென்ன நட்சத் திரங்கள் இருக்கின்றன? கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள், மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள். இதில் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்கிறது எனப் பாருங்கள். மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாயானவர் ரோகிணியின் சாரத்தில் இருக்கிறார். ரோகிணி முதல் பாதத்தில் இருக்கிறார். அதனால்தான் செவ்வாயை நவாம்சத்தில் மேஷத்தில் போட்டிருக்கிறோம்.
ரோகிணியின் அதிபதி யார்? சந்திரனல்லவா? ஆகவே செவ்வாய் சந்திரன்கொடுக்க வேண்டிய பலன்களைக் கொடுத்து விட்டார். சந்திரன் இந்த ஜாதகத்தில் 11-ம் வீட்டிற்கு அதிபதியல்லவா? அவர் 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக 4, 11-ம் வீட்டுப் பலன்களைசெவ்வாய் கொடுத்து விட்டார். 4-ம் வீடு என்பது ஸ்திர சொத்துக்களைக் குறிக்கும் வீடல்லவா? ? 11-ம் வீடு என்பது நமது ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வீடல்லவா? ஆக செவ்வாய் இவருடைய ஆசையான சொந்தவீடு கட்ட வேண்டும் என்ற கனவைப் பூர்த்தி செய்து விட்டது.
1. ஒரு கிரகம் முதலில் தான் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்கிறதோ அதன் அதிபதி கொடுக்க வேண்டிய பலன்களைக் கொடுப்பார். மேற்கண்ட உதாரணத்தில் செவ்வாய் சந்திரனின் சாரத்தில் இருக்கிறார். சந்திரன் 11-ம் வீட்டிற்கு அதிபதியாகி 4-ம் வீட்டில் இருக்கிறார் அல்லவா. சந்திரன் 4, 11வீடுகளின் பலனைக் கொடுக்க வேண்டும். ஆக அவர் கொடுக்க வேண்டிய பலன்களை அவர் சாரத்தில் இருக்கும் செவ்வாய் கொடுத்து விட்டார்.
அதற்கு அடுத்தபடியாக தன் ஆதிபத்தியமுள்ள வீடுகளின் பலனைக் கொடுப்பார். இந்த ஜாதகத்தில் மூன்றாம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் 9-ம் வீட்டில் இருக்கிறார். ஆக 3, 8, 9-ம் வீட்டின் பலன்களையும் கொடுக்க வேண்டும். அப்படி என்ன அந்த வீடுகளின் பலனைக் கொடுத்தார் எனப் பார்ப்போம். 3-ம் வீடு என்பது குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு என்பது நீண்ட பயணத்தையும் குறிக்கிறது அல்லவா? இவர் செவ்வாய் தசையின் போது பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. ஆக 3, 9 -ம் வீட்டுப் பலன்களையும் அனுபவித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 41 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்