நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 21
இலக்கினத்தில் இருந்தால் தெய்வ அனுக்கிரகம் அவருக்குக் கிடைக்கும். Providential Help என்று சொல்வார்களே அது அவர்களுக்குக் கிடைக்கும். இலக்கினத்தில் கெட்ட கிரகம் இருந்து அதனுடன் 5-ம் வீட்டதிபர் இருந்தால் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பார்.
2-ம் வீட்டில் இருந்தால் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைக்கும். சரி1 எப்போது கிடைக்கும்? 5-ம் வீட்டையும், 2-ம் வீட்டையும் குறிக்கும் தசா, புக்தி காலங்களில் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து பணவரவு கிட்டும். ஏனெனில் 5-ம் வீடு அரசாங்கத்தையும் குறிக்கிறது. ஒருவருக்கு 5-ம் வீட்டையும் 2-ம் வீட்டையும் குறிக்கும் கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் புத்திரபாக்கியம் உண்டாகும். 5-ம் வீடு புத்திரத்தையும், 2-ம் வீடு குடும்பத்தையும் குறிப்பதனால் அப்போது புத்திர பாக்கியம் உண்டாகும். 5-ம் வீட்டதிபதியுடன் பாபகிரகங்களின் சேர்க்கை இருந்து 2-ல் இருந்தால் அப்போது பணவிரயம் ஏற்படும். ரேஸ், ஸ்பெகுலேஷன் துறையில் பணத்தைக் கோட்டை விடுவர். அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர்.
3-ம் வீடு சிறு பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 5-ம் வீடு மதம் கோவில்களைக் குறிக்கிறது. ஆக இவர் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர். 3-ம் வீடு என்பது 5-ம் வீட்டிற்குப் 11-வது வீடு அல்லவா? புத்திர பாக்கியம் உண்டென்று கூறலாம். 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் நன்றாக இருக்கும் எனக்கொள்ளலாம். இதுதான் 5-ம் வீட்டதிபர் 3-ல் இருந்தால் பலன்.
5-ம் வீட்டதிபர் 4-ல் இருந்தால் 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். ஏனெனில் 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம் வீடல்லவா! 5-ல் சுபக்கிரகங்கள் இருந்தால்தான் அந்தவீட்டின் காரகத்துவம் ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இவரின் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பார் எனக்கொள்ளலாம். இவரின் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.
5-ம் வீட்டதிபர் 5-ல் இருந்தால் தன் தொழிலில் திறமையுடன் இருப்பார். மந்திர சாஸ்த்திரங்களில் திறமைமிகுந்தவராக இருப்பார். இவரின் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். அரசாங்கத்தின் உதவி இவர்களுக்குக் கிட்டும். புத்திரர்களால் இவருக்கு உதவி கிட்டும்.
5-ம் வீட்டதிபர் 6-ல் இருந்தால் புத்திர பாக்கியம் குறைவு எனக் கொள்ளலாம். ஏனெனில் 6-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா! தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.
6-ம் இடம் தாய்மாமனைக் குறிக்கிறது அல்லவா! சிலர் தாய்மாமனின் குழந்தையை தத்து எடுத்துக் கொள்வர். புத்திரர்களால் நன்மைகளையோ அல்லது லாபத்தையோ எதிர்பார்க்க முடியாது.
7-ல் இருந்தால் காதல் திருமணம்செய்து கொள்வர். 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிக்கிறது அல்லவா? இந்த சேர்க்கை காதல் திருமணத்தைக் கொடுக்கும்.
8-ம் இடத்தில் இருந்தால் புத்திர சந்தான தோஷம் உண்டு. அதிர்ஷ்டக்குறைவானவர் என்று கூறலாம்.
9-ம் வீட்டில் இருந்தால் இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார். கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும். பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர். சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பார்கள். தருமம், நீதி ஆகியவற்றைக் கடைப் பிடித்து வாழ்க்கை நடத்துவார்கள்.
10-ம் வீட்டில் இருந்தால் புத்திர சந்தான விருத்தி ஏற்படும். சத்காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? அங்கு 5-ம் வீட்டு அதிபதி இருப்பின் இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். இவருக்குப் புத்திரர்களால் உதவி கிடைக்கும். மேலே கூறியதுபோல் லாட்டரி, ரேஸ்போன்றவற்றிலிருந்து பணவரவு உண்டாகும். பொதுவாக 5-ம் இடத்தின் காரகத்துவங்கள் சிறந்து விளங்கும்.
12-ம் வீட்டில் இருந்தால் இதுவும் புத்திர தோஷம்தான். மனைவிக்கு அடிக்கடி கர்பச்சிதைவு ஏற்படும். உடல் நிலை பாதிக்கக்கூடும். எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.
நாம் 5-ம் வீட்டிற்குடையவர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொண்டோம். அடுத்த பாடத்தில் 5-ம் வீட்டின் மற்ற பலன்களைப் பார்ப்போம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 21 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்