நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 18
2. சிலர் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் செய்து இருப்பர். அம்மாதிரிக் குற்றங்கள் செய்திருப்போருக்கு அவர்கள் செய்யக்கூடிய பரிகாரங்களுக்குப் பலன் கிட்டும். அவர்களுக்கு இலக்கினத்திற்கோ, சந்திரனுக்கோ அல்லது தசாபுக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ அல்லது 9-ம் வீட்டுக்காரரின் பார்வையோ இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு அவர்கள் செய்யக் கூடிய பரிகாரங்களுக்குப் பலன் கிட்டும். இத்தகைய பாபங்களுக்கு "துருத-அத்ருத கருமம்" எனப்பெயர்.
3. சிலர் மிகச் சிறிதளவு குற்றங்கள் புரிந்திருப்பர். அச்செயல்களால் யாரும் பாதிக்கப்படாதிருந்திருப்பர். அவ்வாறு செய்த தவறுக்கு "அத்ருத கருமம்" எனப் பெயர். அவர்கள் எந்தவிதப் பரிகாரமும் செய்யாமலே அவர்களுக்கு அனுகூலமாகக் காரியங்கள் நடக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு இலக்கினத்திலோ, அல்லது சந்திரனுடனோ குருவோ அல்லது 9-ம் வீட்டிற்காரரோ சேர்ந்திருப்பார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒருவர் ஜாதகத்தில் இலக்கினத்துடனோ அல்லது சந்திரா இலக்கினத்துடனோ குருவோ அல்லது 9-ம் வீட்டிற்குடையவனோ சேர்ந்திருப்பது அல்லது பார்ப்பது மிக நல்லது என்று தெரிகிறது அல்லவா? இப்போது நீங்கள் ஒருவர் ஜாதகத்தைப் பார்த்து அவர் பரிகாரம் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று சொல்ல முடியும் அல்லவா? ஆகவே எல்லோருக்கும் பரிகாரங்கள் தேவையில்லை. மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 18 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்