மருதகாசி பாடல்கள் - பக்கம் - 51
பெண்: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே! உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே! ஆண்: வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே! அல்லி விழி தாவக் கண்டேன் என்மேலே! பெண்: வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே! கண்ணெதிரில் காணுகிறேன் ப்ரேமையினாலே! ஆண்: மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப்போலே அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே! பெண்: விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே! எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே! ஆண்: சிந்தை நிலைமாறியதாலே எந்தன் முன்னாலே! செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே! |
உத்தமபுத்திரன்-1958
இசை: G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 51 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - கண்டேன், போலே, மேலே, பெண்