மருதகாசி பாடல்கள் - பக்கம் - 43
பெண்: கண்ணுக்கு நீ யொரு கன்னிப் பொண்ணு!-என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு! உண்ணடியோ சோறு உண்ணடியோ!-நீ ஒட்டாரம் பண்ணுவ தென்னடியோ! ஆண்: வண்ணச் சம்பா குத்தி சோறாக்கி வாளைமீன் துண்டத்தைச் சாறாக்கி வஞ்சம் அறியாத பெண் உனக்கு-நல்ல வஞ்சர மீனும் பொரிச்சிருக்கு! பெண்: உருவத்தில் நீ யொரு செங்கரும்பு! உள்ளத்தில் சின்னஞ்சிறு அரும்பு!-நீ ஓடியாடி பண்ணும் அக்குறும்பு-இந்த உலகமறியா பிள்ளைக் குறும்பு! ஆண்: இது பிஞ்சில் பழுக்கிற காலமடி!-பதி னஞ்சில் இது என்ன கோலமடி! நெஞ்சில் உன் எதிர்காலம் வந்து!-என்னை சஞ்சலத்துக்கு ஆளாக்குதடி |
உள்ளத்தில் குழந்தையடி -1978
இசை : சங்கர் கனேஷ்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் & வாணி ஜெயராம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 43 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்